செய்திகள் :

"தொகுதி மறுவரையறையில் திமுகவை பாஜக ஏமாற்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சொல்லும் விளக்கம் என்ன?

post image

தொகுதி மறுவரையறையில் திமுகவை பாஜக தவறாக வழிநடத்துவதாக மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் பதிவிட்டிருப்பதாவது...

"அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50% மக்களவைத் தொகுதிகளை உயர்த்தித் தருவதாக ஒரு போலியான மாயையைக் காட்டி, பாஜக கட்சி திமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளைத் தவறாக வழிநடத்தி வருகிறது.

தொகுதி மறுவரையறை
தொகுதி மறுவரையறை

முதலில், இந்த நடவடிக்கையைச் செய்ய வேண்டுமென்றால், முன்னாள் பிரதமர்களான திருமதி. இந்திரா காந்தி, திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543 ஆகக் கட்டுப்படுத்தி வைத்துள்ள அரசியல்சாசன விதியைத் திருத்த வேண்டும்.

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைத்தால் அது தென்னிந்தியாவிற்கு அநீதியாக முடியும் என்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50% தொகுதிகளை உயர்த்தித் தருவதாகக் கூறி பிராந்தியக் கட்சிகளை பாஜக ஈர்க்கப் பார்க்கிறது. அதற்கு அரசியல் சாசனத் திருத்தங்கள் தேவைப்படும்.

மேலும், 815 உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய நாடாளுமன்றம் ஒரு திறனற்ற நாடாளுமன்றமாகவே இருக்கும். எந்தவொரு உறுப்பினருக்கும் அர்த்தமுள்ள வகையில் பேசுவதற்குப் போதிய நேரம் கிடைக்காது.

அத்துடன், உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் தென்னிந்தியாவிற்கும் வடஇந்தியாவிற்கும் இடையே உள்ள இடைவெளி மேலும் அதிகரிக்கும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இந்த 'மொத்த எண்ணிக்கை' மட்டுமே மிக முக்கியமானது.

தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதன் மூலம், பாஜக தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக தொகுதிகளைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வழியேற்படும்.

தொகுதி மறுவரையறையோடு மகளிர் இடஒதுக்கீட்டை இணைப்பது ஒரு அரசியல் தந்திரமே தவிர வேறில்லை. தற்போதுள்ள 543 தொகுதிகளிலேயே பெண்களுக்கான 181 இடங்களை தாராளமாக உறுதி செய்ய முடியும்.

எனவே, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே வைத்திருக்க வேண்டும்; மேலும், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய தொகுதிப் பங்கீடே தொடர வேண்டும்"

தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு ஏன் ஆபத்து? - மாணிக்கம் தாகூரின் 5 விளக்கங்கள்|MODI-LIMITATION

தொகுதி மறுவரையறை பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. கூடவே அதற்கான எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துள்ளன.இந்த வேளையில் தொகுதி மறுவரையறையை 'மோடி-லிமிட்டேஷன்' என்றும், அது ஏன் கூடாது என்றும் தனது எக்ஸ் பக்... மேலும் பார்க்க

பழனி நில மோசடி வழக்கு: "அன்வர்தீன் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்?" - தவாக வேல்முருகன் கேள்வி

பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. குற்றவாளிகளைக் காப்பாற்ற நினைப்பது யார்?இந்நிலையில் ... மேலும் பார்க்க

"திமுக அரசுக்குப் போட்டியாக தவெக அரசும் துரோகம் செய்திருக்கிறது" - மின் இணைப்பு குறித்து அன்புமணி

தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 8 மாதமாக இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? என்று கேள்வி கேட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்... மேலும் பார்க்க

சி.விஜயபாஸ்கருக்கு வெறும் மாவட்டப் பதவி மட்டும்தானா? ஆதங்கப்படும் ஆதரவாளர்கள்

அ.தி.மு.க-வில் ஒரு காலத்தில் ‘பவர்’ஃபுல் அமைச்சராக வலம் வந்தவர் சி.விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் மட்டுமின்றி, தமிழக அளவிலும் தனக்கெனத் தனிச் செல்வாக்கை வைத்திருந்தவர். சமீபத்தில் அ.தி.மு.... மேலும் பார்க்க

அதிமுக டு தவெக; விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு முக்கிய பதவி வழங்கிய விஜய்

சில மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களை தவெக நியமித்திருக்கிறது. அதன்படி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த அதிகவினர்களுக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா வினாடி-வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி; கேரள கல்வித்துறையில் சர்ச்சை

கேரள மாநிலம் காசர்கோடு, மஞ்சேஸ்வரம் மற்றும் கும்பளா ஆகிய கல்வித் துணை மண்டலங்களில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக கல்வித் துறை சார்பில் சுதந்திர தின விழா வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. ​அதில்... மேலும் பார்க்க