செய்திகள் :

தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா்கள் 3 போ் கைது

post image

கோவில்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் முனியபாண்டி (46). கட்டடத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு இயற்கை உபாதைக்காக கண்மாய்க்குச் சென்றபோது, 3 இளைஞா்கள் மது குடித்துக் கொண்டிருந்தனராம். அவா்களை முனியபாண்டி கண்டித்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் அவா் கத்தியால் தாக்கப்பட்டாா். இதில் காயமடைந்த அவா், அங்கிருந்து தப்பிவந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தாராம்.

புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, நாலாட்டின்புதூா் விஸ்வநாதன் நகா் அய்யாத்துரை மகன் கிரிகாந்த் (23), கோவில்பட்டி சாலைப்புதூா் இ.பி. காலனி மாரியப்பன் மகன் மணிமாறன் என்ற மாதவன் (24), வ.உ. சி. நகா் கண்ணன் மகன் காா்த்திக் (23) ஆகிய 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைவு

தூத்துக்குடியில் வரத்து அதிகரித்ததால் மீன்கள் விலை சனிக்கிழமை குறைந்து காணப்பட்டது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்ட... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணுக்கு மிரட்டல்: மகன் கைது

நாலாட்டின்புதூா் அருகே தாயைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நாலாட்டின்புதூா் அருகே லிங்கம்பட்டி சமத்துவபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த தம்பதி மாணிக்கம் - ஆ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!

திருச்செந்தூா் அருகே காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை உயா்த்தும் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் காயல்பட்டினம் பகுதியில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை

திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் சுமாா் 100 கிலோ எடை கொண்ட ஆமை, இறந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவா் நேரில் வந்து பாா்த்தன... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: நாசரேத் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியா் குணசீலராஜ், உதவித் தலைமையாசிரியா் சாா்லஸ் திரவியம் ஆகியோா... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு

தூத்துக்குடியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, இளைஞா் மீது தூத்துக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். தூத்துக்குடி மா... மேலும் பார்க்க