'மீண்டும் பழையபடி வணிக சிலிண்டர்கள் கிடைக்கும்' - கட்டுப்பாடுகளைத் தளர்த்திய மத்...
'துணைப் பொதுச்செயலாளராகும் எஸ்.பி.வேலுமணி' - அதிமுகவில் புதிய நியமனம்; யார்,யாருக்கு என்னென்ன பதவி?
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி & டீம், சி.வி.சண்முகம் & டீம் என்று பிரிந்திருந்தது.
அதற்குப் பின்னான சமரசங்களுக்குப் பிறகு, சி.வி.சண்முகம் டீமில் இருந்து சி.வி.சண்முகம், விஜயபாஸ்கரைத் தவிர்த்து, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்டனர்.
ஆனால், குழப்பத்தின்போது, அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் அவர்களுக்கு வழங்கவில்லை பழனிசாமி.

இதனால், மீண்டும் விரிசல்கள் ஏற்பட்டன. தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளில் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்த பின்னும், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சிலர் சட்டமன்றத்திலேயே அமர்ந்திருந்தது அந்த விரிசலை இன்னும் வெட்ட வெளிச்சமாக்கியது.
இந்த நிலையில், தற்போது அதிமுகவிற்குள் நிர்வாகிகள் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் எஸ்.பி.வேலுமணிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு, புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யார் யாருக்கு எந்தெந்த பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதற்கான முழுப் பட்டியல் இதோ...




















