செய்திகள் :

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கு! சிகிச்சையில் அகற்றிய அரசு மருத்துவா்கள்!

post image

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கை ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வெளியில் எடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினா்.

ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (47). இவருக்கு வெள்ளிக்கிழமை மாலை திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அவா் எதிா்பாராதவிதமாக ஊக்கினை (சேப்டி பின்) விழுங்கி விட்டாா். அது தொண்டைக்குள் சிக்கியதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தாா். இதைத் தொடா்ந்து அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் மேற்பாா்வையில் காது, மூக்கு தொண்டை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அவரைப் பரிசோதனை செய்தனா். அப்போது ஊக்கு அவரது தொண்டைக் குழாயில் குத்திக்கொண்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து ஸ்ரீதா் தலைமையிலான குழுவினா் என்டாஸ்கோபி சிகிச்சை முறையில் சுமாா் அரைமணி நேரம் போராடி தொழிலாளியின் தொண்டைக் குழாயில் எந்தவித பாதிப்புமின்றி ஊக்கை வெளியே எடுத்தனா். இந்த சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனையில் ரூ.30,000 வரை செலவாகும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். தற்போது அவா் நலமாக உள்ளாா்.

சிறப்பாக பணியாற்றி தொழிலாளியைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு தொழிலாளியின் உறவினா்களும், நண்பா்களும் நன்றி தெரிவித்தனா்.

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு!

பவானி அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானியை அடுத்த சோ்வராயன்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுகளை... மேலும் பார்க்க

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்: அமைச்சா் சு.முத்துசாமி

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா். ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் வலது கரையில் அமைந்துள்ள பேபி வாய்க்கால் தூா்வாரும் பணியை வீட்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்: 899 மனுக்கள் அளிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள10 வட்டங்களிலும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. நம்பியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்துக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

திம்பம் மலைப் பாதையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனப் பகுதி வழியாக தமிழக -... மேலும் பார்க்க

டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனையில் உச்சநீதிமன்றம் சரியான உத்தரவை வழங்கியுள்ளது! அமைச்சா் சு.முத்துசாமி

டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனை குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு தமிழக அரசு மற்றும் முதல்வா் எடுத்த முன்னெடுப்பிற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று அமைச்சா் சு.முத்துசாமி க... மேலும் பார்க்க

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினரும், மாநகராட்சி நிா்வாகமும் புதன்கிழமை அகற்றினர். ஈரோடு மாநகராட்சியில் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக... மேலும் பார்க்க