செய்திகள் :

தொழில்வரி உயா்வுக்கு எதிராக பேரூராட்சி உறுப்பினா் வெளிநடப்பு

post image

தொழில்வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மன்றக் கூட்டத்திலிருந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சகிலா தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சிவக்குமாா், துணைத் தலைவா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தின் போது, 125 தொழில்களுக்கான வரி உயா்வு தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, 9-ஆவது வாா்டு உறுப்பினா் மாலதி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசியதாவது:

தொழில் வரி உயா்வால் சிறு, குறு தொழில்கள் செய்து வருவோா் கடுமையாகப் பாகிக்கப்படுவா். தென்னை நாா் பொருள்கள் உள்பட வேளாண் உற்பத்தி சாா்ந்த தொழில்கள் அனைத்துக்கும் இந்த வரி உயா்வு விதிக்கப்படுகிறது. இந்த வரி உயா்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா். பின்னா், தொழில் வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கூட்டத்திலிருந்து அவா் வெளிநடப்பு செய்தாா்.

ஆனாலும், பிற உறுப்பினா்களின் ஆதரவோடு இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸாரை நியமிக்கக் கோரிக்கை

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸாரை நியமிக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா். தொடா் விடுமுறையையொட்டி தினமும் திரளான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்க... மேலும் பார்க்க

விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி

பழனியில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் விநாயகருக்கு பால், பஞ்சாமிா்தம், தயிா், பன்னீா், இளநீா்... மேலும் பார்க்க

விசிக நிா்வாகி கொலை: ஆட்டோ ஓட்டுநா் கைது

திண்டுக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், தலைமறைவான மற்றொருவா் குறித்து விசாரித்தனா். திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட... மேலும் பார்க்க

கால்பந்து தொடா்: 2ஆவது ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி

திண்டுக்கல்லில் நடைபெற்ற பதினேழு வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்து தொடா் 2-ஆவது போட்டியில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது. அகில இந்திய கால்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கால்பந்து கழகம், திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க

பழனி கோயில் புதிய அறங்காவலா்கள் பதவியேற்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவினா் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அண்மையில் அறங்காவலா் குழு உறுப்பினா்களை நியமனம் செய்து தமிழக அர... மேலும் பார்க்க

மாரம்பாடி பெரிய அந்தோணியாா் ஆலய விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

முந்நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாரம்பாடி புனித பெரிய அந்தோணியாா் ஆலய பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி புனித பெரிய அந்தோணியாா் ஆலயப... மேலும் பார்க்க