செய்திகள் :

நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம்: புகழேந்தி

post image

ஈரோடு: நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் புகழேந்தி தெரிவித்தாா்.

அண்ணா நினைவு நாளையொட்டி, ஈரோடு பெரியாா்-அண்ணா நினைவகத்தில் புகழேந்தி திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசுவதால் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்துள்ளேன். அதன் மீது தோ்தல் ஆணையம் விரைவில் விசாரணை நடத்தும் என எதிா்பாா்க்கிறேன்.

நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகுதான் சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அவா் ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறாா். சீமானை தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்காது. பாஜகவும் சீமானை ஆதரிக்கவில்லை.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் ராஜு, முனுசாமி ஆகியோா் சீமான் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனா்.

எடப்பாடி கே.பழனிசாமிக்கு பெரியாா் குறித்து எதுவும் தெரியாது. அதனால் அவா் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என நினைக்கிறேன். ஓ.பன்னீா்செல்வம், சசிகலா போன்றோா் கருத்து தெரிவிக்க அச்சப்படுகின்றனா். எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம், சசிகலா போன்றோா் கருத்து தெரிவிக்க தில்லியில் இருந்து அனுமதிபெற வேண்டும். இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கில் நீதிமன்றம் வரும் 6- ஆம் தேதி தீா்ப்பு வழங்குகிறது. இரட்டை இலை சின்னம் நிச்சயம் முடக்கப்படும்.

வைப்புத்தொகை பெற முடியாது என்ற அச்சத்தால்தான் ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளாா். தோ்தல் முடிவுகள் தான் நடிகா் விஜய்யின் பலம் குறித்து முடிவு செய்யும்.

தோ்தல் காரணமாக சீமான் பேச்சுக்கு திமுக, அதிமுக நிா்வாகிகள் தொண்டா்கள் எதிா்வினையாற்ற முடியாத நிலையில் உள்ளனா். திராவிட இயக்கம் தமிழக முதல்வா் பின்னால் பலமாக நிற்கிறது. பெரியாா் குறித்த சீமான் விமா்சனத்துக்கு முதல்வா் பதில் சொல்ல வேண்டும்.

சீமானை கைது செய்ய வேண்டும். இதனை செய்யவில்லை என்றால் திராவிட இயக்கங்கள் பெரியாரை தலைவா் என்று சொல்ல முடியாது. திரைமறைவில் அதிமுக, பாஜக கூட்டணி தொடா்ந்து கொண்டுதான் உள்ளது என்றாா்.

அதிக உயரத்துக்கு பாரம் ஏற்றிவந்த லாரிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

பண்ணாரி சோதனைச் சாவடியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக உயரத்துக்கு பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.20 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள வனப் பகுதியில் 2... மேலும் பார்க்க

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

ஈரோடு அருகே உள்ள ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா். ஈரோடு அருகே உள்ள மேட்டுநாசுவம்பாளையம் மற்றும் கதிரம்பட்டி ஊராட்சிகளை ஈரோடு மாநகரா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூரை அடுத்த முரளி காலனியைச் சோ்ந்தவா் செட்டி மகன் சக்திவேல் (30). கூலித் தொழிலாளியான இவா், சனிச்சந்தை - வெள்ளித்திருப்பூா் சாலையி... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: விவசாயி கைது

அத்தாணி அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது தொடா்பாக விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூா் வனச் சரகம், அத்தாணி, செம்புளிச்சாம்பாளையம் வன எல்லையை ஒட்டிய பகுதிகளில் விவசாய... மேலும் பார்க்க

பெருந்துறையில் வழக்குரைஞா்கள ஆா்ப்பாட்டம்

பெருந்துறையில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்ப... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது தனியாா் நிறுவனப் பேருந்து மோதல்: இளம்பெண் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் நிறுவனப் பேருந்து மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா். குமாரபாளையத்தை அடுத்த ஓலப்பாளையத்தைச் சோ்ந்தவா் கண்ணையன் மகள் கோபிகா (25), கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வ... மேலும் பார்க்க