செய்திகள் :

பாக்கெட் மாவு தோசையால் 2 குழந்தைகள் உயிரிழப்பா? - தீவிர சிகிச்சையில் பெற்றோர்... என்ன நடந்தது?

post image

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் கடையில் தோசை மாவு வாங்கி சமைத்து சாப்பிட்ட குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, அகமதாபாத்தைச் சேர்ந்த விமல் குமார் என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கன்ஷ்யாம் டைரி என்ற கடையில் ரெடிமேட் தோசை மாவை வாங்கிச் சென்றுள்ளார். அன்றிரவு அந்த மாவில் தோசை தயாரித்துச் சாப்பிட்ட விமல் குமார், அவர் மனைவி பாவனா மற்றும் மூத்த மகள் மிஷ்டி ஆகியோருக்கு அடுத்த நாள் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் மூன்று மாதக் குழந்தையான ராஹா, தோசை சாப்பிடவில்லை என்றாலும், மாவைச் சாப்பிட்ட தனது தாயின் தாய்ப்பாலைக் குடித்த உடனேயே உடல்நிலை மோசமடைந்தது.

குஜராத் போலீஸ்
குஜராத் போலீஸ்

பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி அன்று மூன்று மாதக் குழந்தை ராஹா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 5-ம் தேதி அன்று நான்கு வயது சிறுமி மிஷ்டியும் உயிரிழந்தாள். ஒரே வாரத்தில் இரண்டு குழந்தைகளை இழந்த அக்குடும்பம் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளது. தற்போது குழந்தைகளின் பெற்றோர் இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து விமல் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் 'காஷ்யாம் டைரி' கடை மீது புகார் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. இதற்கிடையில், தற்போது மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியவும், உடலில் நச்சுத்தன்மை கலந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும், தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில், மூன்று மாதக் குழந்தையான ரஹாவின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குஜராத் போலீஸ்

இந்த வழக்கு தொடர்பாக சந்த்கேடா காவல் நிலைய ஆய்வாளர் ஜே.கே. மக்வானா, ``முதற்கட்ட விசாரணையில் ஏப்ரல் 1-ம் தேதி வாங்கப்பட்ட மாவே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. தற்போது விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையினர் கன்ஷ்யாம் டைரி கடையிலிருந்து பல்வேறு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கை வந்த பிறகே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கடை உரிமையாளர், ``சம்பவத்தன்று நான் விமலுக்கு மட்டும் மாவு விற்பனை செய்யவில்லை. நிறைய வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர். மற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை. நாங்கள் தரமான பொருள்களையே விற்பனை செய்கிறோம்." என்றார்.

சாத்தான்குளம் விவகாரம்: ``ஆயுள் தண்டனையை விட மரண தண்டனையே..." - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த மாதம் 23-ம் தேதி நீதிபதி முத்து குமரன் தீர்ப்பளித்தார். தொடர்ந்து குற்றவாளிகளுக... மேலும் பார்க்க

காட்டி கொடுத்த டாட்டூ, மதுபாட்டில்: உறவுக்கு தடையாக இருந்ததால் காதலன் மூலம் கணவனை எரித்துகொன்ற மனைவி

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் இருக்கும் சையான் என்ற இடத்தில் கடந்த ஒன்றாம் தேதி முகம் எரிந்த நிலையில் அடையாளம் காணமுடியாத ஒருவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் ... மேலும் பார்க்க

`கிட்னி மோசடி புகாரில் பிக்பாஸ் ஜூலி; ஆதாரங்கள் போலிஸில்.!' - அதிர்ச்சி தகவலின் பகீர் பின்னணி

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலியைத் தொடர்புபடுத்தி எழுந்துள்ள கிட்னி மோசடி புகார் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மது... மேலும் பார்க்க

சென்னை: வங்கியில் வேண்டுமென்றே 1,156 கிராம் நகைகளை தவறவிட்ட முன்னாள் பெண் ஊழியர் - அதிர்ச்சி பின்னணி

சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளை மேலாளராக அகமது காதிரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், 05.12.2025-ம் தேதி பணியிலிருந்தபோது மணிபர்ஸ் ஒன்று கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்தார். உடனே அதை எடு... மேலும் பார்க்க

மகனைக் காப்பாற்ற `நரபலி' கொடுக்கப்பட்ட மகள் - ரத்தத்தை எடுத்து சடங்கு... அதிரவைத்த தாய்!

ஜார்க்கண்ட் மாநிலம், ஹசரிபாக் பகுதியில் பெண் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அப்பெண், உடல் நலமில்லாத தன்னுடைய மகனைக் காப்பாற்ற சொந்த மகளை நரபலி கொடுத்துள்ளார். ரேஷ்மி... மேலும் பார்க்க

ரூ.80 லட்சம் சம்பளம், ரகசிய திருமணம், ஏ.ஐயால் பறிபோன வேலை: கணவர் தற்கொலையால் மனைவியும் விபரீத முடிவு

பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு சாப்ட்வேர் தம்பதி ஒன்று தற்கொலை செய்து கொண்டது. பெங்களூருவில் உள்ள கோதனூர் என்ற இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் பானு ரெட்டி(32), பிபி ஷா... மேலும் பார்க்க