செய்திகள் :

நடிகை கடத்தல், பாலியல் தொல்லை; வீடியோ பதிவு - திலீப்-க்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு

post image

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி படபிடிப்பு முடித்து மாலை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தர். அப்போது அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை வீடியோவாக பதிவுசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இந்த வழக்கில் நடிகையின் கார் டிரைவராக இருந்த பல்சர் சுனி என்ற சுனில் குமார் கைது செய்யப்பட்டார்.

அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய போலீஸார் இதில் நடிகர் திலீபுக்கும் தொடர்பு உள்ளதாக கண்டறிந்தனர். துபாயில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் திலீப், நடிகை காவியாவுடன் மிகவும் நெருங்கி பழகியுள்ளார். அதுபற்றி திலீபின் முதல் மனைவி மஞ்சு வாரியரிடம் பிரபல நடிகை கூறியிருக்கிறர். இதையடுத்து மஞ்சு வாரியாருக்கும் திலீபிற்கும் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு விவகாரத்தானது.

சுனில்குமார் என்ற பல்சர் சுனி

இதையடுத்து நடிகர் திலீப், நடிகை காவியா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் பிரபல நடிகையை பழிவாங்கவே பல்சர் சுனி மூலம் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மொத்தம் 9 பேர் குற்றவாழிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதில் முதலில் பல்சர் சுனியும், 8-வது இடத்தில் நடிகர் திலீப் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கின் ஆரம்பகட்டத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் இரண்டரை மாதங்கள் சிறையில் இருந்த திலீப் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் பிரின்ஸிபல் செசன்ஸ் கோர்டில் நடைபெற்று வரும் நிலையில் விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நடிகையை அவமானப்படுத்தும் விதமாக பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுப்பதற்காக இந்த கடத்தல் நடந்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கின. 261 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 1700 ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 8-ம் தேதி (டிச.8) தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் திலீப்

இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்ற பல்சர் சுனிக்கு நடிகர் திலீப் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. கூட்டு பாலியல் தொல்லை, பெண்மையை களங்கப்படுத்துதல், ஆதாரங்களை அழித்தல், ஆபாசமாக படம்பிடித்து பகிர்தல் உள்ளிட்டவைகளில் சதித்திட்டம் தீட்டியதாகவும் திலீப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எட்டரை ஆண்டுகளுக்குப்பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்காசி: விவசாய இலவச மின் இணைப்பிற்கு ரூ.7,000 லஞ்சம்: வசமாக சிக்கிய இளநிலை பொறியாளர்!

தென்காசி மாவட்டம், வி.கே புதூர் அருகே கீழ வீராணம் பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் என்பவர் அவரது தந்தையின் பெயரில் வி.கே புதூரில் உள்ள நிலத்திற்கு மின் கம்பம் வைப்பதற்கு ரூபாய் 24,000 பணம் செலுத்தி, இலவச ... மேலும் பார்க்க

சிவகாசி: நிறுவனத்தின் அருகில் மது அருந்துவதை கண்டித்ததால் ஆத்திரம்; பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் விநாயகர் காலனியில் வசிப்பவர் கென்னடி கண்ணன்( வயது 50 ). இவர் சிவகாசியிலிருந்து விஸ்வநத்தம் செல்லும் சாலையிலுள்ள காளியம்மன் கோயில் பழைய தெருவின் பின்புறம்... மேலும் பார்க்க

மனைவிக்கு ஊசி மூலம் பாதரசம் செலுத்திய கணவன்; 9 மாத போராட்டத்திற்கு பிறகு பெண் உயிரிழப்பு

பெங்களூரு அருகே உள்ள அத்திபேலே என்ற இடத்தில் வசித்தவர் வித்யா. இவரை அவரது கணவரும், அவரது மாமனாரும் சேர்ந்து கடுமையாக சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்தனர்.திடீரென வித்யாவின் உடல் நிலை கடந்த மார்ச் ம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: மனைவியைக் கொலை செய்த கணவர்; சிக்கிய கணவர் - தவிக்கும் இரண்டு குழந்தைகள்

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள ஆதனஞ்சேரி கிராமம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன் (36). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி நந்தினி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள்... மேலும் பார்க்க

`2,800 ஆமை குஞ்சுகள்' சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தல் - சுங்கத்துறை தீவிர விசாரணை

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதரா... மேலும் பார்க்க

மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் - சிவகாசியில் கொடூரம்

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலை திருவள்ளுவர் காலனியில் வசிக்கும் ராமர் என்பவர் கக்கன் காலனியில் பழக்கடையுடன் குளிர்பானக் கடையும் நடத்தி வருகிறார். இவர் வழக்... மேலும் பார்க்க