செய்திகள் :

``நன்றியுணர்வு கேள்வி... RSS திட்டப்படி ஆட்சிக்கு வர சதி" - வைகோவுக்கு மாணிக்கம் தாக்கூர் பதில்!

post image

தி.மு.க கூட்டணியில், உதய சூரியன் சின்னத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட ம.தி.மு.க 4 இடங்களில் போட்டியிட்டது. அதில் 2 இடங்களைக் கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் தி.மு.க-வுக்கு பாதகமாக வந்த நிலையில், தி.மு.க கூட்டணிக் கட்சிகளில் சில த.வெ.க-வுக்கு ஆதவளித்தன. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக தலைவர் வைகோ, ``தி.மு.க ஆதரவோடு வெற்றி பெற்ற காங்கிரஸ் நன்றிகூட சொல்லாமல் சென்று தவெக தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றது. காங்கிரஸுடன் எங்களை ஒப்பிடாதீர்கள்." எனப் பேசியிருந்தார்.

வைகோ
வைகோ

இதற்கு பதிலளிக்கும் வகையில் எம்.பி மாணிக்கம் தாக்கூர், `மூத்த தலைவர் வைகோ அவர்களுக்கும், அவர் பொதுவாழ்க்கைக்கு ஆற்றிய நீண்டகால பங்களிப்பிற்கும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனினும், உரிய மரியாதையுடன் நான் தெளிவுபடுத்த விரும்புவது என்னவெனில், நன்றியுணர்வு குறித்த கேள்வியைப் பொறுத்தவரை, அரசியல் கூட்டணிகள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. 4ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோதே, பா.ஜ.க /ஆர்.எஸ்.எஸ் தரப்பின் முயற்சியின்படி தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுடன் தொடர்புகள் மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடங்கியது.

பா.ஜ.க-வின் தூண்டுதலின் பேரில் தி.மு.க திரு.எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அ.தி.மு.க-வுடன் தொடர்புகளை ஆரம்பித்தது, மேலும் மறைமுக dealings நடந்தது, இயல்பாகவே காங்கிரஸ் தலைமைக்கு கவலைகளை ஏற்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில், அந்தக் கவலைகளைப் பற்றி பேசாமல் காங்கிரஸ் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பது நியாயமானதோ அல்லது நடைமுறைக்கு ஏற்றதோ அல்ல. இந்தியா கூட்டணியில் உள்ள எங்கள் மதிப்பிற்குரிய சகாக்கள், தி.மு.க-வுடனான தங்களின் ஏமாற்றங்கள் அல்லது கருத்து வேறுபாடுகளில் காங்கிரஸ் கட்சியை இழுத்துச் செல்ல வேண்டாம் என்று நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் தனது கொள்கைகள் தனது தொண்டர்கள் மற்றும் பரஸ்பர மரியாதை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் தனது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து நிற்கும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எஸ்.பி.வேலுமணியை ’துரோகி' என்ற அதிமுக தொண்டர் – பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் பரபரப்பு!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள், கடந்த மே 16ம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்... மேலும் பார்க்க

போலி கையொப்ப சிக்கல்; அதிகரிக்கும் அதிருப்தி... பிளவை நோக்கிச் செல்கிறதா மம்தா கட்சி?!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. இத்தோல்வியால் கட்சி கலகலத்துப்போய் இருக்கிறது. வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களில் பெரும்பான்மையினர் திரிணா... மேலும் பார்க்க

"தேர்தல் பிரச்சார MOOD-ல் இருந்து அவர் வெளிய வரல.!”- முதல்வர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் அட்வைஸ்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் இன்று (ஜூன்.2) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திருச்சிக்குச் சென்றிருந்தார். அவர்... மேலும் பார்க்க

பட்டியல் சமூகத்துக்கு மீண்டும் வாய்ப்பு? - தவெக சார்பில் ராஜ்யசபா செல்லப்போவது யார்?

தமிழகத்தில் காலியாக உள்ள 1 மாநிலங்களவை எம்.பி இடத்துக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. ஜூன் 8 ஆம் தேதி வரைக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசமிருக்கிறது. எம்.எல்.ஏக்களின் எ... மேலும் பார்க்க

`அணி மாறுவதில் வைகோ 8 அடி பாய்ஞ்சா துரை 16 அடி பாய்வார்னு நிரூபிக்கிறார், அவ்வளவுதான்'- மல்லை சத்யா

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தங்களுடைய வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று பேசியது, தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை கிளப்... மேலும் பார்க்க

தவெக: ``ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து..." - முதல்வர் விஜய்யைச் சாடும் டிடிவி தினகரன்

முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் தேர்தலை எதிர்க்கொண்டு வெற்றிப்பெற்றார். அதைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கான எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த நில... மேலும் பார்க்க