செய்திகள் :

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட அண்ணன், தங்கை; உதவிக்கரம் நீட்டிய தவெக எம்.எல்.ஏ!

post image

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா. கணவரை இழந்த இவர், கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் நகுல், மகள் நவ்யா ஆகியோர் அடுத்தடுத்து நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால் இவர்கள் இருவராலும் நடக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இருவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதோடு, வீட்டிலேயே முடங்கி இருக்கும் துயர நிலை ஏற்பட்டது. மேலும் நகுல், நவ்யா ஆகியோருக்குப் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

கூலி வேலை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இருவருக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியாமல் சித்ரா தவித்து வருகிறார்.

சுனில் ஆனந்த் உதவி
சுனில் ஆனந்த் உதவி

இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், மேட்டுப்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் அக்குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

தனது ஆதரவாளர்களுடன் நேரில் சென்ற சுனில் ஆனந்த் அக்குடும்பத்தினரின் நிலை குறித்து நேரில் கேட்டறிந்தார். மேலும் தனது சொந்தப் பணத்தில் இருந்து அக்குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான பொருள்களையும் வழங்கி உதவினார்.

அப்போது குழந்தைகளின் மருத்துவம் மற்றும் கல்விக்கு உதவுமாறு சித்ரா வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று குழந்தைகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கவும், ஆசிரியரை வீட்டிற்கே வரவழைத்து குழந்தைகள் கல்வி பயிலவும் உதவுவதாகவும் சுனில் ஆனந்த் உறுதியளித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சித்ரா குடும்பத்தினர் கண்ணீர் மல்க சுனில் ஆனந்திற்கு நன்றி தெரிவித்தனர்.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க