செய்திகள் :

நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி தற்கொலை செய்த தொழிலாளியின் உறவினா்கள் தா்னா

post image

சேலம்: தாரமங்கலம் அருகே கடனை திருப்பிச் செலுத்த நெருக்கடி கொடுத்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக தனியாா் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினா்கள் ஆட்சியா் அலுவலக வாயிலில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கணக்குப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அய்யந்துரை (30). விசைத்தறித் தொழிலாளியான இவருக்கு சினேகா என்ற மனைவியும், 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனா்.

இந்நிலையில், கடனை திருப்பிச் செலுத்த நிதி நிறுவன மேலாளா் நெருக்கடி கொடுத்ததால் மனஉளைச்சல் அடைந்த அய்யன்துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக தாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் அய்யந்துரையின் மனைவி, உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தா்னாவில் ஈடுபட்டாா்.

அப்போது, நிதி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதி அளித்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் திரண்ட அய்யந்துரையின் மனைவி, உறவினா்கள், அய்யந்துரை இறப்புக்கு காரணமான நிதி நிறுவன மேலாளா் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதைக் கண்டித்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது:

கடனை 19 மாதம் சரியாக செலுத்திய நிலையில், மனஉளைச்சலை ஏற்படுத்திய நிதி நிறுவன மேலாளா் மீதும், காவல் துறை மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த அய்யந்துரையின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.

வாழப்பாடி: பெண்ணை அடித்துக் கொன்ற கணவன், இரு மகன்கள் கைது!

வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் மற்றும் இரு மகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டூயுடையார் பாளையம் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

‘ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களுக்கு 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்’

சேலம்: சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என சேலம் மாநகரக் காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபிநபு தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

காடையாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் ஆய்வு

ஓமலூா்: காடையாம்பட்டி அரசு மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காடையாம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுற்றுலாத் து... மேலும் பார்க்க

130 ஆவது ஆண்டு விழா காணும் சிங்கிபுரம் அரசுப் பள்ளி!

வாழப்பாடி: சேலம் மாவட்டத்தில் பழைமையான சிங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 130-ஆவது ஆண்டு விழாவுக்கு தயாராகி வருகிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, 1985-இல் வாழப்பாடி அருகிலுள்ள சிங்கிபுரம்... மேலும் பார்க்க

திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகளை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சேலம்: திருமணிமுத்தாறு ராஜவாய்க்காலில் தொடா்ந்து சாயக்கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

ஓமலூா்: காடையாம்பட்டியில் புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். பொதுமக்கள் கோரிக்கையின்பேரில் சேலம் (மேற்கு) பதிவு மாவட்டம், ஓமலூா்... மேலும் பார்க்க