செய்திகள் :

நீளும் ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?' பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்

post image

ஈரான் மீது போர் தொடுத்துள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும்.

இன்று காலையில் இருந்து தொடர்ந்து வருகிறது இந்தப் போர்.

ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் அலுவலகம், அணு ஆயுத பகுதிகள், ஈரானின் தலைநகரம் டெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன இரு நாடுகளும்.

காமேனி
காமேனி

இப்போது வெளியாகி உள்ள தகவலின் படி, ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்சாதே மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி முகமது பாக்பூர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்கின்றன சில ஊடகங்கள்.

ஆனால், இந்தத் தகவல்களை ஈரான் ஊடகம் எதுவும் உறுதி செய்யவில்லை.

ஈரானின் உச்ச தலைவர் காமேனியும் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியான நிலையில்

, இந்தத் தகவலை இஸ்ரேலின் சேனல் 12 மறுத்துள்ளது. காமேனிக்கு சிறிதளவு காயம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது.

இன்னும் சிறிது நேரத்தில் காமேனியின் பேச்சு ஒளிபரப்பப்படலாம் என்றும், அது முன்னரே ரெக்கார்ட் செய்யப்பட்டதாக இருக்கும் என்றும் சேனல் 12 தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?

ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது.ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்க... மேலும் பார்க்க

'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' - ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு

இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன.ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது.இந்தத் தாக்குதலில் க... மேலும் பார்க்க

US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பதில் தாக்குதலாக, ஈரானின் IRGC( Islamic Revolutionary Guards) படை, இஸ்ரேல் நோக்கி ஏவுகணைத் தாக்கு... மேலும் பார்க்க

”ஓபிஎஸ் வாங்கிய பட்டுபுடவைக்கு பணம் தரணும்; ஸ்டாலின் மீட்டுத் தருவாரா?” - பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் சிங்.செல்வராஜ்(65) அ.தி.மு.க நகரச் செயலாளரான இவர், திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். சோழன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவராகவும... மேலும் பார்க்க