செய்திகள் :

ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; 'நண்பர்களுக்கு' மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன?

post image

இப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானைத் தாக்கி வருகின்றன.

இந்த நேரத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைச் சாடி வருகின்றன.

ஈரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குவதற்கும், பிரதமர்‌ மோடியை இங்கே எதிர்க்கட்சிகள் சாடுவதற்கும் காரணம் - மோடியின் சமீபத்திய பயணம்.

கடந்த 25, 26-ம் தேதிகளில் இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்‌ மோடி. அங்கே அவருக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருதான, 'நெசெட் பதக்கத்தின் சபாநாயகர்' அவருக்கு வழங்கப்பட்டது.
மோடி - நெதன்யாகு
மோடி - நெதன்யாகு

அதெல்லாம் சரி... இதில் மோடியைச் சாடுவதற்கான காரணம் என்ன என்பதற்கு பதில் சொல்கிறது எதிர்க்கட்சியான காங்கிரஸ் எக்ஸ் பதிவு...

"மிஸ்டர் மோடி தன்னுடைய இரண்டு இஸ்ரேல் பயணத்தை முடித்த பிறகு, இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

இப்படியொரு பதற்றம் உருவாகும் என்று கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தும், மோடி இஸ்ரேல் சென்றது அவரது கோழைத்தனத்தைக் காட்டுகிறது.

இது இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்பதைக் காட்டுகிறது. இதற்கு அவர்‌ விருது கூட பெற்றிருக்கிறார்.

இந்த இஸ்ரேல் பயணம் அவமானகரமானது. மேலும் மோடியின்‌ 'நல்ல நண்பர்கள்' இந்தப் போரைத் தொடங்கியுள்ளது மிகவும் மோசமானது".

மோடியின் இஸ்ரேல் பயணம் இந்தியா இஸ்ரேலுக்கு சாதகமாக உள்ளதைப் போல உலக அரங்கில் காட்டுகிறது. இதை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று பரவலாகக் கேள்வி எழுந்துள்ளது.

'காங்கிரஸின் சந்திப்பை தவிர்த்த முதல்வர்; பதட்டமடைந்த செல்வப்பெருந்தகை!'- இறுக்கும் டி.ஆர்.பாலு & கோ

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளால் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம். சீட்டை குறைத்து விடுவார்களோ என்கிற பதட்டத்தில் இருக்கும் வைகோ ஒரு துண்டு சீட்டோடு அறிவாலயம் வர, இன்னொ... மேலும் பார்க்க

அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - தொடரும் பதற்றம்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து இன்று தாக்குதலை நடந்தி இருக்கின்றனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்... மேலும் பார்க்க

ஆந்திரா: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 20 பேர் உயிரிழந்த சோகம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே சூர்யஸ்ரீ என்ற பெயரில் பட்டாசு ஆல... மேலும் பார்க்க

காங்கிரஸை காலி செய்த திமுக; இந்திய அரசியலைத் தீர்மானித்த திருவண்ணாமலை இடைத்தேர்தல்|அரசியல் ஆடுபுலி 7

திருவண்ணாமலை இடைத் தேர்தல்அரசியல் ஆடுபுலி 07ஒரு இடைத்தேர்தல், இந்திய அரசியலின் ஆடுபுலி ஆட்டத்தையே மாற்றியமைத்தது என்றால், அது திருவண்ணாமலை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் என்று கூறலாம். முதலமைச்சர்களாக ... மேலும் பார்க்க