செய்திகள் :

அறிவாலயம் வராத ம.நீ.ம - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி?

post image

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தினர் அறிவாலயம் பக்கமே வராதாதது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க - ம.நீ.ம இடையே என்ன நடக்கிறதென விசாரித்தோம்.

அண்ணா அறிவாலயம்

பிப்ரவரி 23-ம் தேதி இந்திய முஸ்லீம் லீக்கும் மனிதநேய மக்கள் கட்சியும் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தொடங்கிய நிலையில், பிப்ரவரி 27-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் 28-ம் தேதி காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவர்களுடன் டி.ஆர் பாலு, கே.என் நேரு தலைமையிலான குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. வருகின்ற மார்ச் 2-ம் தேதி வி.சி.க-வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தைக்கு வருவதாகவோ, அழைப்பு விடுக்கப்பட்டதாகவே எந்த தகவலும் இல்லை.

நம்மிடம் பேசிய ம.நீ.ம மாநில நிர்வாகிகள் சிலர், "முதலில் பிப்ரவரி 23-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த அறிவாலயம் செல்வதாக இருந்தோம். எத்தணை தொகுதிகள் கேட்பது, எந்தெந்த தொகுதிகள் கேட்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எங்கள் தலைவரிடம் ஆலோசனை பெற முடியவில்லை.

ஸ்டாலின், கமல்ஹாசன்
ஸ்டாலின், கமல்ஹாசன்

அடுத்ததாக பிப்ரவரி 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடக்கும் எனச் கட்சி மட்டத்தில் பேசப்பட்டது. ஆனால் அதையும் தள்ளிவைக்கப்பட்டதாக சொல்லிவிட்டார்கள்" என்றனர்.

தி.மு.க - ம.நீ.ம இடையே என்னதான் நடக்கிறது என விசாரித்தோம், அதுகுறித்துப் பேசும் தலைமைக்கு நெருக்கமானவர்கள் "எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் எங்கள் தலைவர் கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகிய மூவரும்தான் தொகுதி குறித்து பேசுவார்கள்.

அப்படித்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபா சீட் கையெழுத்தானது. 2026 பொறுத்தவரையில் 6 சீட் கேட்கிறது ம.நீ.ம, தி.மு.க 3 தொகுதியிலேயே நிற்கிறது. அதிலொரு தெளிவு கிடைத்தபிறகுதான் தொகுதி பங்கீட்டுக்கு செல்ல இருக்கிறோம். கூடுதல் சீட்டுக்காக தனிச்சின்னத்தை விட்டுக்கொடுக்கவும் எங்கள் தலைவர் தயாராக இருக்கிறார்" என்றனர்

மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ்

இதுகுறித்து விளக்கம் கேட்க ம.நீ.ம செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம் "தி.மு.க-வுடன் மிகுந்த இணக்கமாக இருக்கிறார் எங்கள் தலைவர். எத்தணை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவிலேயே பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்போம்" என்றார்.

தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்... விசிக-வின் கணக்கு என்ன?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தொடங்கியிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது அறிவாலயம். இச்சூழலில் வி.சி.க-வின் எதிர்பார்ப்புக... மேலும் பார்க்க

'சட்டமன்றத் தேர்தலை தள்ளிப்போடுங்கள்.!' - தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை!

தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ்மான் திடீரென தேர்தலை தள்ளிப்போடச் சொல்லியிருப்பது பரபரப்பை கிளப... மேலும் பார்க்க

`எஸ்.ஐ.ஆர் மூலம் குடியுரிமை பறிப்பு' - அகில இந்திய மக்கள் இயக்க மாநாட்டில் பரக்கல பிரபாகர் ஆவேசம்!

சென்னை தி.நகரிலுள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் அகில இந்திய மக்கள் இயக்கம் சார்பில் 'வஞ்சிக்கப்படும் தென்னிந்தியா, பழிவாங்கப்படும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கருத்தரங்கம் நடை... மேலும் பார்க்க

`இந்த வீட்டு வாசல்ல அம்மா கார் டயருக்கு வணக்கம் வச்சவங்கதானே; இங்க வர்றதுக்கு என்ன?' – ஜெ.தீபா

மறைந்த முன்னாள் முதல்வரும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று அக்கட்சியின் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் வீட்டில் தற்போது வசித்து வ... மேலும் பார்க்க

ம.நடராஜனின் சகோதரர் மரணம் - கட்சியின் பெயரை வி.கே.சசிகலா அறிவிக்காததற்கு காரணம் இதுவா?

வி.கே. சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராஜனின் மூத்த சகோதரர் ம. சாமிநாதன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.ராமநாதரபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நேற்று புதிய கட்சி தொடங்கும் முடிவை அறிவித்தார் வி.கே சசிகல... மேலும் பார்க்க

PEN ரிபோர்ட்; உதயநிதியின் கிரீன் சிக்னல்; உற்சாகத்தில் உடுமலை இளைஞரணி - திடீர் விசிட் பின்னணி!

திருப்பூர் மாவட்டத்தில் விஐபி தொகுதியாக கருதப்படும் உடுமலைப்பேட்டைதான் இப்போது, மாவட்ட திமுக-வுக்குள் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.1996-க்குப் பிறகான 25 ஆண்டுகளில், இந்த தொகுதியில் நடைபெற்ற 5 ... மேலும் பார்க்க