செய்திகள் :

நீ நான் காதல் தொடரிலிருந்து விலகிய பிரபலம்!

post image

நீ நான் காதல் தொடரில் இருந்து நடிகை தனுஷிக் விலகியுள்ளார்.

ஸ்டார் மா தொலைக்காட்சியின் பிரபல தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2013 நவ 13 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு 350 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், அஞ்சலி பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தனுஷிக் இத்தொடரில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட விடியோவில், "தவிர்க்க முடியாத சில காரணங்களால் நீ நான் காதல் தொடரில் அஞ்சலி பாத்திரத்தில் என்னால் தொடர முடியாது.

வாய்ப்பு அளித்த விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி, தொடர் குழுவுக்கு நன்றி. இனி அஞ்சலியாக நடிக்கவுள்ள ஸ்வேதாவுக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்” என்று பேசியுள்ளார்.

முன்னதாக இத்தொடரில் இருந்து நடிகை சாய் காயத்ரி விலகிய நிலையில், தற்போது தனுஷிக் விலகியுள்ளார்.

பிகார் தலைநகரில் துப்பாக்கிச் சூடு! சுற்றி வளைத்த பாதுகாப்புப் படை!

பிகார் தலைநகர் பாட்னாவில் திடீரெனத் மக்கள் நிரம்பிய பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பதுங்கிய பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.கான்கர்பாக் பகுதியிலுள்ள ஓர் வீட்டின் வாசலில் ... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் மீது பறந்த டிரோன்! செயலிழக்க வைத்த காவல் துறை!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது பறந்த டிரோன் கேமராவை காவல் துறையினர் செயலிழக்க வைத்து வீழ்த்தியுள்ளனர்.அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது டிரோன்கள் பறக்கவிடுவதற்கு தடைசெய்யப்... மேலும் பார்க்க

அபுதாபியில் ‘மேட் இன் ரஷியா’ திருவிழா!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் 'மேட் இன் ரஷியா’ திருவிழா மற்றும் கண்காட்சி வருகின்ற பிப்.21 முதல் 5 நாள்களுக்கு நடத்தப்படவுள்ளது.ரஷிய கலாச்சாரம், பாரம்பரியம், மரபுகள் மற்றும் அதிநவீன தொ... மேலும் பார்க்க

சமூக நலத்திட்டங்களுக்கான நிதி: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட மத்திய அரசின் பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவித்திட வலியுறுத்தி மத்திய மகளிர்மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைஅமைச்சர் அன... மேலும் பார்க்க

ஜம்முவில் கடத்தப்பட்ட சகோதரிகள் சத்தீஸ்கரில் மீட்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடத்தப்பட்ட சகோதரிகள் இருவர் ஒரு வாரம் கழித்து சத்தீஸ்கர் மாநிலத்தில் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.ஜம்முவின் ஜானிப்பூரில் கடந்த ஒரு வாரம் முன்பு 16 மற்ற... மேலும் பார்க்க

சென்னையில் 'பிங்க் ஆட்டோ' திட்டம்: மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம்!

சென்னையில் மார்ச் மாதம் முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடு... மேலும் பார்க்க