செய்திகள் :

``நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்'' - குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள்

post image

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றபோது, விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெற்கதிர்கள்
நெற்கதிர்கள்

மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், "நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுகிறது, கொள்முதல் நிலைய ஊழியர்கள் சில முகவர்களோடு சேர்ந்துகொண்டு ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் லஞ்சம் பெறுகிறார்கள்.

மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே 40-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதாக பொய்யான தகவலை தெரிவித்த நுகர்வோர் வாணிபக்கழக மண்டல மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முறையாக மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் உரிய நேரத்தில் திறக்கவில்லை" என்று குற்றம்சாட்டி வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

வெளி நடப்பு செய்த விவசாயிகள்
வெளி நடப்பு செய்த விவசாயிகள்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் சங்க மாநிலத் தலைவர் பார்த்தசாரதி,

"விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை கூறிய தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் மதுரை மண்டல மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து முறைகேடு நடைபெறுகிறது. ஒவ்வொரு நெல் மூட்டைகளுக்கும் லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். அவர்களைக் கண்டிக்கிறோம்" என்றார்.

தஞ்சாவூர்: ”வாய்க்காலில் 10 இடங்களில் உடைப்பு” - வயல்களை சூழ்ந்த வெள்ளம் வேதனையில் விவசாயிகள்

டெல்டா மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வயல்களில் மழை நீர் தேங்கியதால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் நீரில்... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன் ஆர்.கே.ஶ்ரீசுதர்சன்,அவினாசி,திருப்பூர்.9443775416பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு.கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, மைசூர் மல்லி, பொன்ன... மேலும் பார்க்க

திருவாரூர்: கோயிலுக்குள் புகுந்த மழை நீர்; குளமாக மாறிய வயல்வெளி - விவசாயிகள் கவலை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்துற... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `குளம் போல் மாறிய வயல், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்' - தொடர் மழையால் விவசாயிகள் வேதனை

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.கோவில், வ... மேலும் பார்க்க

நெல்லை: கனமழையுடன் வீசிய சூறைக்காற்று; முறிந்து விழுந்த 2 லட்சம் வாழைகள் - கண்ணீரில் விவசாயிகள்!

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட மேலச்செவல், சொக்கலிங்... மேலும் பார்க்க

பச்சை நிறமாக மாறிய மேட்டூர் அணை - கர்நாடகா தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகிறதா?

கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில், மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பருவமழை காலத்தில் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் திறந்து வி... மேலும் பார்க்க