செய்திகள் :

நேபாளம்: 3 நாள்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 6 வயது சிறுமி - துளிர்ந்த நம்பிக்கை!

post image

பல நூறு பேரைக் கொன்ற நேபாள வெள்ளப் பேரிடரில் சின்ன ஆச்சர்யமும் நடந்துள்ளது.

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 9 மணியளவில் பனிப்பாறை சரிந்து நேபாளத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ளம் தொடங்கியதே நேபாளத்தில் உள்ள ரசுவா மாவட்டத்தில்தான்.

ரசுவா மாவட்டம் முழுவதுமே வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கே மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன... வருகின்றன.

நேபாள வெள்ளப் பெருக்கு
நேபாள வெள்ளப் பெருக்கு

ரசுவா மாவட்டத்தில் உள்ளது திமுரே கிராமம். வெள்ளிக்கிழமை மாலை (ஆகஸ்ட் 28) இந்தக் கிராமத்தில் வழக்கம்போல மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

அப்போது சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மெல்லிய அழுக்குரல் கேட்டுள்ளது.

அந்த இடிபாடுகளை அப்புறப்படுத்தி பார்த்தப்போது, அங்கே 6 வயது சிறுமி இருந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று நாள்கள் இடிபாடுகளுக்கு கீழே சிறுமி இருந்திருக்கிறார்.

சிறுமியை மீட்டு ஆரம்பத்தில் திமுரேயில் உள்ள ஏ.பி.எஃப் (APF) எல்லைப் பாதுகாப்பு முகாமில் அவருக்குச் சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அவர் உடல்நிலை மோசமாக இருந்ததால், கூடுதல் மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

இதனால், வெள்ளிக்கிழமை மாலையே, சிறுமியை ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவிற்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

ஆனால், மோசமான வானிலை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக அந்தப் பயணம் தள்ளிப்போனது.

பின்னர், சனிக்கிழமை மதியம், வானிலை சீராக சிறுமி காத்மாண்டுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தற்போது அந்தச் சிறுமி தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இடிபாடுகளுக்கு இடையே இன்னும் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வரும் மீட்புக் குழுவினருக்கு இந்தச் சிறுமி ஒரு நம்பிக்கை!

Nepal: "எங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேரின் நிலை குறித்து தெரியவில்லை!"- கண்ணீர் மல்கிய ஜக்கி வாசுதேவ்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் நேற்று (ஆக. 26) காலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக நேபாள அரசு அதிகாரபூர்வமாக தெரிவி... மேலும் பார்க்க

Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு! - காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

நேபாளத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிற்கு நிலநடுக்கம் காரணம் என முதலில் கூறப்பட்ட நிலையில், அது ஒரு மிகப்பெரிய பனிப்பாற... மேலும் பார்க்க

Nepal Flood: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு - கலங்க வைக்கும் கோரக் காட்சிகள்! | Video

This is seriously scary. CCTV footage from Gyirong Port in Tibet, China, directly opposite Nepal’s Rasuwa district. This flash flood hit here first and later caused massive havoc in Nepal. Can’t even ... மேலும் பார்க்க

Rain Alert: இடி, மின்னலுடன் மழை; 15 மாவட்டங்களுக்கு காலை வரை அலர்ட்; சென்னைக்கு என்ன?

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. சில இடங்களில் இன்னும் மழை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று ... மேலும் பார்க்க

ஊட்டி: எல்-நினோ தாக்கம்; தரை தட்டிய அணைக்கட்டுகள் - தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்!

எல்- நினோ தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை பொய்த்திருக்கிறது. சமவெளிப் பகுதிகளுக்கு இணையாக நீலகிரியின் பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அ... மேலும் பார்க்க

கேரளம்: கனமழை, நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி - சபரிமலைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, உறங்கிக்கொண்டிர... மேலும் பார்க்க