செய்திகள் :

நேபாள வெள்ளம்: நீர்மின் சுரங்கத்துக்குள் 9 நாட்கள்... உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்!

post image

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்துக்குப் பிறகு, மண்ணாலும் குப்பைகளாலும் மூடப்பட்ட நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் மீட்புப் பணிகளுக்கு இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளத்தின் பல பகுதிகளை திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு புரட்டிப்போட்டது. பனிப்பாறை சரிவு காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திரிசூலி பகுதியில் அமைந்துள்ள Trishuli-3A Hydropower Project-ம் இந்தப் பேரிடரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வெள்ளத்துடன் அடித்துவந்த சேறும் குப்பைகளும் சுரங்கத்தின் நுழைவுப் பகுதிகளை மூடியதால், உள்ளே வேலை செய்த பலரின் நிலை என்னவென்று தெரியாமல் போனது.

இந்த நிலையில், ஒன்பது நாட்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் இருந்து கபீர் மகர்ஜன் (45),சஞ்சய் ஷா (30) ஆகிய இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் சுரங்கத்தின் உள்ளே சுமார் 170 மீட்டர் தொலைவில் இருந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் நடத்திக்கொண்டிருந்தபோது சுரங்கத்துக்குள் இருந்து சத்தங்கள் கேட்டதாகவும், அதன் பிறகு அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி மீட்புப் பணிகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஞ்சய் ஷா ,Nepal Electricity Authority-யில் Mechanical Foreman-ஆக பணியாற்றி வந்தவர்.கபீர் மகர்ஜன்,Trishuli-3A திட்டத்தில் Supervisor-ஆக இருந்துள்ளார். நீண்ட நேரம் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்ததால் இருவருக்கும் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு பேரின் மீட்பு, இன்னும் சுரங்கங்களுக்குள் சிக்கியிருப்பவர்களையும் உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலி பகுதியில் உள்ள பல்வேறு நீர்மின் திட்டங்களில் சுமார் 900 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் சுமார் 500 பேர் சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணியாளர்கள் சுரங்கங்களுக்குள் தொடர்ந்து காற்றை செலுத்தி வருகின்றனர். இந்த வெள்ளப் பேரிடரில் நேபாளத்தில் இதுவரை 1,259 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக நேபாள தகவல் தொடர்புத்துறை அமைச்சர் Bikram Timilsina தெரிவித்துள்ளார். “மேலும் பலர் மீட்கப்படுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று அவர் தனது Facebook பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய பேரழிவுக்கு நடுவே, ஒன்பது நாட்களுக்குப் பிறகு இரண்டு உயிர்கள் மீட்கப்பட்டிருப்பது, தேடுதல் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், தங்கள் உறவுகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கும் புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

பனிமலையின் பகுதி உடைந்து விழுந்த நொடிகள்... நேபாளப் பேரழிவின் தொடக்கத்தை பதிவு செய்த ட்ரோன் வீடியோ!

நேபாளத்தின் லாங்டாங் லிருங் (Langtang Lirung) மலையில் அண்மையில் நிகழ்ந்த பாறை மற்றும் பனிச்சரிவு, சில நிமிடங்களில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய பெருவெள்ளமாக மாறியது. 900-க்கும் மேற்பட்டோரின் உயிர... மேலும் பார்க்க

"உங்களுடைய அக்கறைக்கும், தாராளமான உதவிக்கும் நன்றி"- இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த நேபாளம் அதிபர்

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண... மேலும் பார்க்க

"நேபாள ராணுவம்தான் அவர்களை மீட்டெடுத்தது..!"- டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களைச் சந்தித்த ஜெய்சங்கர்

நேபாளத்தில் இருந்து 21 தமிழர்கள் டெல்லி வந்தடைந்திருக்கின்றனர். அவர்களை தமிழக அமைச்சர்கள் குழு மட்டுமின்றி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் சந்தித்தி... மேலும் பார்க்க

`வேற வழியிலதான் வர்றோம், ஆனாலும் திக்னு இருக்கு!' - சீனா டு காட்மண்டு பயணத்திலிருக்கும் ரேணுகாதேவி

ஒட்டு மொத்த உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது நேபாள நாட்டில் நிகழ்ந்த பெருவெள்ள பேரிடர். பனிப்பாறைகள் திடீரென சரிந்து விழுந்ததாலேயே இத்தகையதொரு பெரிய துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாக கூறுகின்றனர் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: நேபாள வெள்ளத்திற்குக் காரணம் என்ன? - விளக்கும் நிலத்தியல்துறை பேராசிரியர்!

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த வெள்ளத்திற்கு காரணம் என்ன? என, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நிலத்தியல் துறை பேராசிரியர் முன... மேலும் பார்க்க