செய்திகள் :

'பங்குகள் வாங்கும்போதும், விற்கும்போதும்' - SEBI பெயரில் புது மோசடி; அலர்ட் ஆகுங்க மக்களே!

post image

'பணம் கேட்டால் கொடுக்காதீர்கள்' என்று தங்களது பெயரில் நடக்கும் மோசடி குறித்து அலர்ட் செய்துள்ளது செபி.

நேற்று செபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது...

"செபியின் லெட்டர்பேடைப் பயன்படுத்தி, நிதி சட்டம் 2004-ன் கீழ், நிலுவையில் உள்ள STT (Securities Transaction Tax)-ஐ கட்டுமாறு மோசடி பேர்வழிகள் நோட்டீஸ் அனுப்புவது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.

அது செபியின் நோட்டீஸ் அல்ல. இந்திய ரிசர்வ் வங்கியுடன் இந்த மாதிரியான எந்த நடவடிக்கைகளிலும் செபி இணைந்து செயல்படவில்லை. STT வரி பங்குகள் வாங்கும் போதும், விற்கும் போதும் விதிக்கப்பட்டு, புரோக்கர்களால் வாங்கப்பட்டு விடுகிறது.

SEBI - செபி
SEBI - செபி

மேலும், செபி அதிகாரி என்று கூறியும், செபி மெயில் ஐடி போன்ற ஐடியில் இருந்து மெசேஜ் அனுப்புவதும் நடந்து வருகிறது.

இதனால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்" என்று தெரிவித்து, இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்க சில வழிகளையும் சொல்லியுள்ளது செபி...

1. செபியால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் செபி வலைதளத்தில் உள்ளது. இதை Sebi > Enforcement-ல் செக் செய்யவும்.

2. ஆன்லைன் உத்தரவுகள், செட்டில்மென்டுகள், மீட்பு கட்டணம் போன்றவை siportal.sebi.gov.in-ல் தான் செய்யப்படும்.

3. Home > About > SEBI Directory - இப்படி செபி அதிகாரியின் தொடர்பு தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

4. செபியில் இருந்து வரும் மெயில்கள் '@sebi.gov.in' - இந்த டொமைன் முகவரியில் இருந்து தான் வரும்.

5. செபியின் ஆபீஸ்களின் முகவரி Home > About > Addresses of Offices of SEBI'-ல் தெரிந்துகொள்ளுங்கள்.

பாலியல் சித்ரவதை: இரண்டரை வயது பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் -சிக்கிய திமுக பிரமுகர்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள ஜேசுராஜபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட கவுண்டன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்சி (வயது 24). இவரும், ஓசூரில் கட்டட வேலைச் செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டம் கீ... மேலும் பார்க்க

2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை, கொலை; சிக்கிய திமுக நிர்வாகி - நயினார் நாகேந்திரனின் கண்டனம்

கிருஷ்ணகிரியில் 2 வயது பெண் குழந்தையை திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியு... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை - துணிச்சலுடன் போராடி போலீஸிடம் இளைஞரைப் பிடித்து கொடுத்த மாணவி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம். 26-ம் தேதி மதியம் கல்லூரி முடிந... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை - திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்துள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், இருசப்பன் என்பவர்களுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக பலமு... மேலும் பார்க்க

கும்பகோணம்: ”சார் நீங்க பேட் டச் செய்றீங்க"- கொதித்த மாணவிகள்; அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

கும்பகோணம் அருகே அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் கருப்பூரைச் சேர்ந்த ராஜமனோகர் (55) என்பவர் 10-ம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மாணவிகளுக்குப் பாலியல் ... மேலும் பார்க்க

சென்னை: `நம்ம வீடியோக்களை காட்டிவிடுவேன்' - தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 850 கிராம் நகை, பணம் பறிப்பு

சென்னை, புரசைவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநிலத்தைச் சேர்ந்த 35 வயது பெண், தன்னுடைய கணவர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரின் கணவர் தொழிலதிபராக உள்ளார். அதே அடுக்கு... மேலும் பார்க்க