செய்திகள் :

'பட்டாசு வெடித்த ரசிகர்கள்; கண்ணீர் விட்டு அழுத தவெக மாவட்டச் செயலாளர்'- கரூர் ஜன நாயகன் காட்சிகள்

post image

தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் வெளியாகி உள்ளது. கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நான்கு முக்கிய திரையரங்குகளில் ஜன நாயகன் திரைப்படம் வெளியாகியுள்ளது.

முதல் காட்சியைப் பார்க்க வந்த ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல் காட்சிக்காக கரூர் திண்ணாப்பா திரையரங்குக்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், திரையில் விஜய்யின் டைட்டில் கார்டு ஒளிபரப்பு செய்யும் பொழுது, கண்ணீர் விட்டு அழுதார்.

அதேபோல், திரையரங்கில் திரைப்படம் பார்த்தபோது, ஒவ்வொரு காட்சிக்கும் விஜய் ரசிகர்கள் கைத்தட்டி கூச்சல் எழுப்பி, விசில் அடித்து காட்சிக்குக் காட்சி வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, திரைப்படத்தில் அவர் பேசும் அரசியல் வசனங்களுக்கு ஆரவாரம் செய்தனர்.

திரைப்படத்தின் இறுதிக் காட்சி முடிந்ததும், திரையரங்குக்குள் ரசிகர்கள் பலர் கண்ணீர் விட்டு, அழுதபடியே திரையரங்கையை விட்டு வெளியேறினர்.

celebration

அப்போது பேசிய ரசிகர்கள், "பல்வேறு தடைகளைக் கடந்து வெளியாகி உள்ள ஜன நாயகம் திரைப்படம் தேர்தலுக்கு முன்னதாகவே வெளியாகி இருக்க வேண்டும். இருப்பினும் தற்போது வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படமாக ஜனநாயகம் திரைப்படம் உள்ளது. இனி, தமிழ் சினிமாவில் இதுபோன்று ஒரு நடிகர் உருவாகப் போவதில்லை. ஜன நாயகன் திரைப்படத்தைப் பார்த்து சிலர் திருந்த வேண்டும். இல்லையென்றால் விஜய் திருத்துவார். சாதி, மத அரசியலுக்கு எதிராக, மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை திரைப்படம் மூலம் தமிழக முதலமைச்சர் விஜய் பேசி இருக்கிறார்.

விஜய்யை இனி திரையில் பாக்காவிட்டாலும் இனி நிஜத்தில் தினந்தோறும், தொலைக்காட்சி மூலமும் அவர் செய்யும் செயல்களை செய்திகளாகப் பார்க்க இருக்கின்றோம். தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி திரைப்படமாக திரைப்படத்தைப் பார்க்கவில்லை. அவர், தினம் தினம் மக்களுக்குச் சேவை செய்ய அரசியலுக்கு வந்துள்ளார்.

இப்போது, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகவும் பதவியில் உள்ளார். இன்னும் அதிகமாக தமிழக மக்களுக்கு நல்லது செய்ய உள்ளார்" என்று சொன்னார்கள்.

Vishwanath & Sons: "குழந்தைகள் என் காமெடி காட்சிகளைக் கொண்டாடும்போது..." - நெகிழும் மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Vishwanath & Sons வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர்... மேலும் பார்க்க

Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' - குரு சோமசுந்தரம்

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Paris Cafe: ``நம் யாராலும் தவிர்க்க முடியாத முக்கியமான விஷயம்" - நடிகை அனுமோல் பேச்சு

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Arun Vijay: "பலத்தோடு மீண்டும் வருவேன்" - 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயம்

நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சி... மேலும் பார்க்க

பருத்திவீரன் : தெற்கின் வெக்கை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 16

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 16பருத்திவீரன்வெட்டுக்குத்துக்குப் பயப்படாத, சிறைக்குச் செல்ல அஞ... மேலும் பார்க்க

Sai Abhyankar: "கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பது என் கனவு" - சாய் அபயங்கர்

சுயாதீன இசைக்கலைஞராகத் தனது கரியரைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார். Sai Abhyankar'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்புத் தொடக்க விழாவில் கலந்துகொண்டவ... மேலும் பார்க்க