செய்திகள் :

பட்டியல் சமூகத்துக்கு மீண்டும் வாய்ப்பு? - தவெக சார்பில் ராஜ்யசபா செல்லப்போவது யார்?

post image

தமிழகத்தில் காலியாக உள்ள 1 மாநிலங்களவை எம்.பி இடத்துக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. ஜூன் 8 ஆம் தேதி வரைக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசமிருக்கிறது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஒரு எம்.பி இடம் தவெகவுக்கே கிடைக்கும். இந்நிலையில், தவெக சார்பில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகும் முதல் குரல் யாருடையது எனும் கேள்வி எழுந்திருக்கிறது. விஜய் டிக் அடிக்கப் போகும் அந்த நபர் யார்?

TVK Vijay
TVK Vijay

தேர்தலுக்கு பிறகு காங்கிரஸூடன் கூட்டணி சேர்ந்தது தவெக. காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் தான் தவெகவின் ஆட்சியே நடந்து வருகிறது. மேலும், காங்கிரஸ் திமுக ஆதரவுடன் கிறிஸ்டோபர் திலக்கை ராஜ்யசபாவுக்கு அனுப்பியிருந்தது. அதுபோக, 2028 இல் ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டுமென வாய்மொழியாகவும் உத்தரவாதம் வாங்கியிருந்தது.

இந்நிலையில்தான், தேர்தலுக்கு பின்பு திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. திமுகவிடம் கேட்ட அந்த கூடுதலான ராஜ்ய சபா சீட்டை விஜய்யிடம் கேட்டுப் பெறலாம் என காங்கிரஸில் ஒரு குழு ஆலோசனை கூறியிருக்கிறது. தவெக தரப்பிலும் இந்த ஐடியா குறித்து முதற்கட்டமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸூக்கு ராஜ்ய சபா சீட் கொடுப்பதன் மூலம் இண்டியா கூட்டணியில் இன்னும் அழுத்தமாக கால்பதிக்க முடியும் என்றும் யோசிக்கப்பட்டிருக்கிறது.

பிரவீன் சக்கரவர்த்தி
பிரவீன் சக்கரவர்த்தி

அப்படி காங்கிரஸூக்கு வழங்குவதாக இருந்தால் பிரவீண் சக்கரவர்த்தியை நிறுத்தலாம் என்பது ஒரு சாய்ஸாகவும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முதல் முதலாக நாடாளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பை வேறு கட்சிக்கு ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என தவெகவின் பவர் சென்டர்கள் சிலர் இந்த ஐடியாவை நிராகரித்திருக்கின்றனர். மேலும், நிதி சார்ந்த விஷயங்களுக்கு மத்திய அரசுடன் இணக்கமாக போக வேண்டிய தேவையும் இருக்கிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தவெக உதவுவதை டெல்லி மேலிடம் ரசிக்காது என்கிற யதார்த்தத்தையும் தவெகவின் முக்கியஸ்தர்கள் உணர்ந்திருக்கின்றனர். ஆனால், இன்னமும் காங்கிரஸ் தரப்பில் ஒரு டீம் தவெகவுடன் இதுசம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் கட்சிக்காக உழைத்தவர்கள் யாரையாவது நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கலாம் எனும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். அதன்படி லயோலா மணி அல்லது கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத் குமார் ஆகிய இருவரில் ஒருவரை டிக் அடிக்கலாம் எனும் மனநிலையில் முதல்வருக்கு நெருக்கமான வட்டத்தினர் இருப்பதாக கூறப்படுகிறது.

சம்பத் குமார்
சம்பத் குமார்

இருவருமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். லயோலா மணி ஆதி திராவிடர் சமூகத்தையும் சம்பத் குமார் தேவேந்திர குல வேளாளர் சமூகத்த்தையும் சேர்ந்தவர். அமைச்சரவையில் உள்ள 8 தலித்துகளில் 7 பேர் ஆதிதிராவிடர்களாக இருப்பதால் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சம்பத் குமாரின் பெயர் இறுதியாக டிக் அடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சரவையிலும் 8 பட்டியலினத்தவர்களுக்கு இடம் கொடுத்துவிட்டு, ராஜ்ய சபா சீட்டையும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கே கொடுத்தால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடுமோ எனும் தயக்கமும் விஜய்யின் வியூக வகுப்பு குழுவிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய்க்கு நெருக்கமான வட்டத்திலிருந்தே முக்கியமான ஒருவரை இறக்கலாமா எனும் பேச்சுவார்த்தையும் ஓடிக்கொண்டிருக்கிறது. எம்.பி சீட் இல்லையென்றாலும் சம்பத் குமாரை தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கவும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார்?

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க