செய்திகள் :

பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் - பணம் தராததால் வெறிச்செயல்!

post image

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65) கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களுக்கு மேனகா(38), மௌனிகா(25) என இரண்டு மகள்கள். மேனகா திருமணமானவர். கருத்துவேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழ்வதாக சொல்கிறார்கள். செல்வராஜ், தொழில் செய்ய வேண்டும் என மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட செல்வராஜ்

இதையடுத்து அவரது உறவினர்கள், விஜயலட்சுமி மற்றும் மகள்களிடம் கூடி பேசி இரண்டு சவரன் நகையை விஜயலட்சுமியிடம் இருந்து வாங்கி கொடுத்துள்ளனர். நகையை அடகு வைத்து பணத்தை செலவு செய்திருக்கிறார். சில மாதங்கள் அமைதியாக இருந்த செல்வராஜ், மீண்டும் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து பணம் கேட்டுள்ளார்.

இதற்கு விஜயலட்சுமி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. செல்வராஜ் பணம் கேட்டு பிரச்னை செய்யும் போதெல்லாம் இரண்டு மகள்களும் தாய் விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். நேற்று இரவும் இதே போல் பணம் கேட்டு செல்வராஜ் பிரச்னை செய்துள்ளார். இதையடுத்து வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்துள்ளனர். பணம் தராத ஆத்திரத்தில் இருந்த செல்வராஜ் அதிகாலையில் துாங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

தீ மள மளவென பரவி எரிய மூன்று பேரும் அலறி துடித்துள்ளனர். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த மூவரையும், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் தாய் மற்றும் இரண்டு மகள்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்கா விற்றதாக கைதுசெய்யப்பட்ட இளைஞர் சிறையில் மரணம்; போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் கொதிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பை அடுத்தஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவருக்கு ஆனந்தவல்லி என்ற மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர். இவர்தனது வீட்டின் அருகே பெட்டிக... மேலும் பார்க்க

குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது. இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் ... மேலும் பார்க்க

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க

`நாலாவது குழந்தைய எப்படி வளர்க்க போறீங்க? பேசாம வித்துடலாம்' - காரைக்குடியை உலுக்கிய குழந்தை விற்பனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்றபோது வாக்குவாதம்; நடுரோட்டில் மனைவியை சுட்டுத் தள்ளிவிட்டு சென்ற டெல்லி போலீஸ்காரர்

டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொ... மேலும் பார்க்க

சேலம்: மூடியிருந்த அம்பேத்கர் சிலையைத் திறந்த நபர்கள்; கல்வீச்சு, தடியடி என விடியவிடிய வன்முறை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க