செய்திகள் :

பத்ம விருதுகள்: ``மம்மூட்டி, மாதவன், ரோஹித் சர்மா" - இந்திய அளவில் கவனம் பெற்ற நட்சத்திரங்கள்!

post image

மத்திய அரசு நேற்று 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பிரிவுகளில் 131 விருதுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐந்து பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொது வாழ்க்கை, கலை, சினிமா, இலக்கியம், விளையாட்டு, அறிவியல் மற்றும் சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களூக்கு இந்த விருது வழங்கப்படும். அதன் அடிப்படையில், நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், மறைந்த மூத்த நடிகர் தர்மேந்திர சிங் தியோல், மறைந்த கேரள முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன், கர்நாடக இசை வயலின் கலைஞர் என். ராஜம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. டி. தாமஸ், பிரபல எழுத்தாளர் பி. நாராயணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

பத்ம பூஷண் பட்டியலில் பாடகி அல்கா யாக்னிக், நடிகர் மம்மூட்டி, தொழிலதிபர் உதய் கோடக், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷ்யாரி, மறைந்த விளம்பரத் துறை நிபுணர் பியூஷ் பாண்டே, சமூகத் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பத்மஸ்ரீ பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர்களான ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுர், மகளிர் ஹாக்கி வீராங்கனை சவிதா புனியா ஆகியோர் விளையாட்டுத் துறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். கலைத் துறைப் பட்டியலில் நடிகர்கள் மாதவன், பிரோசென்ஜித் சாட்டர்ஜி, கர்நாடக இசைப் பாடகி திரிப்தி முகர்ஜி, நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைஞர்களான தருண் பட்டாச்சார்யா, போக்கிலா லெக்தேபி போன்றோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த ஆண்டு விருது பட்டியலில் 19 பெண்கள், 6 வெளிநாட்டினர், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், மறைந்தவர்கள் 16 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பத்ம விருதுகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் வழங்கப்படுகின்றன.

மம்முட்டி
மம்முட்டி

நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில், ``என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்முக்கா அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம்.

நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து." எனப் பதிவிட்டிருக்கிறார்.

பாஜக-வை எதிர்க்காத விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? - குழப்பத்தில் கதர்கள்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலகிச் சென்ற அ.தி.மு.க-வை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்த டெல்லி பா.ஜ.க., 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களை கையிலெடுத்திருக்... மேலும் பார்க்க

சென்னை தொகுதிகளுக்கு மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்... கறார் காட்டும் திமுக!

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் ஒருசில தொகுதிகளை கைபற்ற காய்நகர்த்தி வருகிறார்கள் வி.சி.க, கம்யூனிஸ்ட், ... மேலும் பார்க்க

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. அதன் கீழ், சில நடைமுறைகள் மாறும் அல்லவா? அப்படிப் பான் கார்டு எங்கெங்கு தேவை என்பதைப் பார்க்கலாம்... வாங்க...1. முன்பு, ஒரே ந... மேலும் பார்க்க

கலைஞர் உரிமைத் தொகை: ``வங்கி கணக்கில் ரூ.5000" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில... மேலும் பார்க்க

தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன?

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்திற்குக் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி கேட்டு தவெக-வினர் போலீஸில் மனு அளித்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு போலீஸார் தரப்பி... மேலும் பார்க்க

`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?' - முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்கிறார்?

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டிருந்த குரூப் 2 தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்ட‌ நிலையில், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அத... மேலும் பார்க்க