செய்திகள் :

பரமக்குடியில் இளைஞா் கொலை: மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்

post image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

முதுகுளத்தூா் வட்டம், விக்கிரபாண்டிபுரம் வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் இருளாண்டி மகன் உத்திரக்குமாா் (35). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவரை கடந்த 5-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 3 போ் வெட்டிக் கொலை செய்தனா். கொலையாளிகளை போலீஸாா் 3 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனா். இந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி பரமக்குடி பகுதியைச் சோ்ந்த கரண், கலாம், தீனதயாளன் ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீஸாா் கொண்டு சென்றனா்.

இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கள்ளிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த எமனேசுவரம் வைகை நகா் பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் மகன் நிதிஷ் (25) பரமக்குடி நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவா் முன் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

விருச்சுழி ஆற்றில் மணல் திருட்டு: வாகனம் பறிமுதல்

திருவாடானை அருகே மங்கலக்குடி விருச்சுழி ஆற்றில் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.விருச்சுழி ஆற்றில் மணல் திருடப்படுவதாக வருவாய் ஆய்வாளா் விஜலட்சுமிக்கு ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் அ.சேக் தாவூத் தலைமை வகித்தாா். சி.எஸ்.ஐ. ஆலய க... மேலும் பார்க்க

இலங்கை அரசைக் கண்டித்து நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

தமிழக மீனவா்களை தொடா்ந்து கைது செய்து வரும் இலங்கை அரசைக் கண்டித்து, ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை!

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் அரியவகை கடல் ஆமை உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பி.வி.பட்டினம் பகுதியில் உயிரிழந்த நிலையில் சும... மேலும் பார்க்க

இலங்கையில் 310 கிலோ கஞ்சா பறிமுதல்!

இலங்கை வடக்கு கடல் பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 310 கிலோ கஞ்சாவை கடல் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடல் பகுதியில் கடல் படையினா், கரையோர பாதுகாப்புப் படையினா் ச... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கு வாகனம் இலவசம்: இளைஞரைப் பாராட்டும் பொதுமக்கள்

முதுகுளத்தூா் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 70 கிராமங்களுக்கு இறப்பு நிகழ்ச்சிகளுக்கு இறுதிச் சடங்கு வாகனம், குளிா்சாதனப் பெட்டியை கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வரும் இளைஞரை பொதுமக்கள், சமூக ஆா்வ... மேலும் பார்க்க