செய்திகள் :

பள்ளியில் பிரியாணி சண்டை; 4 மணிநேரம் வெயிலில் நிற்க வைத்த ஆசிரியர்? - மாடியிலிருந்து குதித்த மாணவி

post image

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியில் 11வது வகுப்பு படிக்கும் ஜான்வி(16) என்ற மாணவி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதையடுத்து அம்மாணவி அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற்னர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் இது தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

இது குறித்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை பிரமோத் கூறுகையில், ''பள்ளி வகுப்பறையில் பிரியாணி சாப்பிடுவது தொடர்பாக மாணவிகளிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் எனது மகளுக்கு தொடர்பு இல்லை என்று சக மாணவிகள் என்னிடம் தெரிவித்தனர்.

ஆனாலும் வகுப்பு ஆசிரியர் எனது மகளை நான்கு மணி நேரம் வகுப்புக்கு வெளியில் வெயிலில் நிற்கும்படி செய்து தண்டனை கொடுத்துள்ளார். அந்த தண்டனையால் எனது மகள் அவமானத்தில் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்''என்று தெரிவித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. பள்ளி முதல்வர் ஆர்.கே. சர்மா இது குறித்து அளித்த பேட்டியில்,'' அந்த மாணவிக்குத் தண்டனை எதுவும் அளிக்கப்படவில்லை. கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி அந்த மாணவி வகுப்பறையிலிருந்து வெளியேறினார். ஆனால், அவர் பள்ளியின் மூன்றாவது தளத்திற்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்தார்''என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில் என்ன நடந்தது என்று சக மாணவிகளிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கி வருகின்றனர்.

தற்கொலை தடுப்பு மையம்

டைம்ஸ் சதுக்கம்: பேங்க் ஆஃப் அமெரிக்கா பெண் அதிகாரி கொலை - நொடியில் முடிந்த இளம் தாயின் வாழ்கை

ஐந்து மாதக் குழந்தை, அன்புக் கணவன், பெருமைக்குரிய வங்கிப் பணி... மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்துகொண்டிருந்த ஒரு இளம் தாயின் வாழ்க்கை, ஒரு நொடியில் சிதைந்துபோன கொடூரம் அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வ... மேலும் பார்க்க

`காலனிக்காரனுங்க உட்கார்ந்ததால் நாற்காலியைக் கொளுத்திட்டேன்’ - முன்னாள் ஊராட்சித் தலைவரின் சாதிவெறி

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியத்துக்குட்பட்ட கொசவன்புதூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்திரபாபு, வயது 52. இவர் அந்த ஊராட்சியின் முன்னாள் மன்றத் தலைவராக இருந்தவர். தற்போது, இவரின் மனைவி புவனேஸ்வரி க... மேலும் பார்க்க

மூதாட்டிகள் டார்கெட்; ஆடம்பர வாழ்க்கைக்காக நகை பறித்த காதல் ஜோடி கைது – கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

கோவை வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 30ம் தேதியன்று சரஸ்வதி என்ற மூதாட்டி தனது உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கருப்பு நிற முகமூடி அணிந்த அடையாளம் தெ... மேலும் பார்க்க

`திருமணம் செய்ததாகக்கூறி தப்ப முடியாது' - சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

கேரள மாநிலம் ​பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு பகுதியில் 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, 27 வயது இளைஞர் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு மன்னார்க்காடு போலீஸார் போக்ஸோ வழ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை - 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த 30ம் தேதி, தனது பாட்டி ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு ஏற்கனவே பழக்... மேலும் பார்க்க

சென்னை: காதல் மனைவியைக் கொலைசெய்த கணவன்; போதையில் வெறிச்செயல்!

சென்னை கொளத்தூர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ். கூலித் தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூரில் உள்ள மாவு மில்லில் வேலைப் பார்த்தபோது அங்கு வேலை செய்த முத்துமாரியம்மாளை (38) காதலித... மேலும் பார்க்க