செய்திகள் :

கோவை: ’அன்று யாசகம் கேட்டவர், இன்று அரசுப் பேருந்து நடத்துநர்’ – சாதித்த திருநங்கை விநோதினி

post image

கோவை தெலுங்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் திருநங்கை வினோதினி. பழனியைச் சொந்த ஊராகக் கொண்ட இவருக்கு, 10ஆம் வகுப்பில் நடத்துனராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. பின்னர் பாலின மாறுபாடு காரணமாக படிப்பை கைவிட்டவர், பழனியில் திருநங்கைகளோடு பயணித்தார். நீண்ட காலத்திற்கு பிறகு 2018-ல் தன்னை ஒரு திருநங்கையாக மாற்றிக்கொண்டவர்  பின் கோவை வந்தார்.

தொடக்கத்தில் வீட்டு வேலைகள், சமையல் வேலைகள், கார் டாக்ஸி ஓட்டுநர் என சிறு சிறு வேலைகள் பார்த்த வினோதினி, கொரோனா காலகட்டத்துல யாசகம் கேட்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டார். அதனை தொடர்ந்து செய்ய விரும்பாத விநோதினி, மனம் தளராமல் உழைத்து தற்போது தற்காலிக அரசுப் பேருந்து நடத்துநராக பணியில் சேர்ந்துள்ளார்.

விநோதினி
விநோதினி

இது குறித்து விநோதினி கூறியதாவது, ”நடத்துநர் ஆகனும்ங்குற முயற்சில ஈடுபட்டபோது எத்தனையோ பேர் எளக்காறமா பார்த்தாங்க, நீயெல்லாம் இங்க வந்து என்ன பண்ண போறனு நெறைய வசைச்சொற்கள வீசுனாங்க. நடத்துனர் வேலை வாங்கியே ஆகனும்னு ஐந்து , ஆறு முறை கோவை மாவட்ட ஆட்சியர் கிட்ட கடிதம் கூட கொடுத்தேன். ஆனா ஒரு பதிலும் வரல...

இது மாதிரி எத்தனை தடைகள் வந்தாலும், அத தாண்டி வரனும்னு தான் நெனச்சேன். கோவை மாவட்ட டி.என்.எஸ்.டி.சி. எம்டி-யாக இருந்த முகமது நசார் சார் தான் என்னோடே இந்த வேலைக்காக மேல் இடத்துல பேசுனாரு. இரண்டு வருஷமா பிறகு இந்த வருஷத்துல தான் எனக்கு வேலை கெடைச்சிருக்கு.

வேலைக்கு வந்த பிறகு நெறைய பேர் வாழ்த்துனாங்க, சிலர் ஆச்சர்யமா பார்த்தாங்க, என்னோட சக ஊழியர்களும் சரிசமமா நடத்துறாங்க. திருநங்கைகள்னா பாலியில் தொழில் தான் பண்ணனும், யாசகம் மட்டும் தான் கேட்கனும் அப்படிங்கிற நிலைமை மாறி எங்களையும் சக மனிதர்களாக பார்க்கனும். நாங்க வேலைகள் செய்ய தயாரா இருக்கிறோம், அரசாங்கமும் எங்களை மதிச்சு எங்களோட தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுத்தால் ஒரு அங்கீகாரம் கிடைக்கும்” என்றார்.

வினோதினியின் வெற்றி பல திருநங்கைகளின் நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது.!

நேபாள பெருவெள்ளத்தில் உயிர் தப்பிய 97 வயது மூதாட்டி - மீட்புப் பணியின் நம்பிக்கை முகமான குணா மாயா!

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குணா மாயா போஹாரா தங்கியிருந்த முதியோர் பராமரிப்பு இல்லம் இடிந்து விழுந்தது. 97 வயதான குணா மாயா அந்த இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். அவரை ம... மேலும் பார்க்க

ஆட்டிசம்: `கையேந்த விரும்பல; உழைத்து வாழ வாய்ப்பு கெடச்சா போதும்'- பொம்மை வியாபாரம் செய்யும் குமார்!

சென்னை, தாம்பரத்தில் சாலையோரக் கோயில் ஒன்றின் முன்பு, "இங்கு வாகனங்களை நிறுத்தக் கூடாது" என்று எழுதப்பட்டிருந்த ஒரு சிறிய இடம். அந்த இடத்தில் விரிக்கப்பட்டிருந்த ஒரு ஷீட்டின் மீது சில பொம்மைகள் அடுக்க... மேலும் பார்க்க

மதுரை: விபத்தில் உயிரிழந்த காவலர்; குடும்பத்துக்காக ஒன்றிணைந்து ரூ.22 லட்சம் திரட்டிய சக காவலர்கள்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். தமிழக காவல்துறையில் சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அங்கு நடந்த விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். மிக இளம் வயதில் அத... மேலும் பார்க்க

'40 ஆண்டுகளில் ரூ. 1.65 கோடி' - யாசகம் பெற்ற பணத்தை மக்களுக்கே தரும் முதியவர்; நெகிழ்ச்சிப் பின்னணி!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சட்டை இல்லாமல் துண்டைப் போர்த்திக்கொண்டு நுழைந்த முதியவர் ஒருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரிக்கிறார்கள். தான் ஒரு யாசகர் என்றும் மக்களிடம் யாசகம்... மேலும் பார்க்க

``பாவப்பட வேண்டாம்; எங்களைச் சமமாக நடத்தினாலே போதும்..!" - சவாலை சாதனையாக்கும் விழிச்சவால் மாணவர்

நம் மனம் பெரும்பாலும் இருப்பவற்றை மறந்து விட்டு, இல்லாதவற்றை நினைத்து ஏங்கும். ஆடம்பரத்தை எதிர்பார்த்து வருந்தும் மனிதர்களுக்கு மத்தியில் அத்தியாவசியத்திற்கே போராடுபவர்களும் உண்டு. நம்மிடம் என்ன இருக்... மேலும் பார்க்க