செய்திகள் :

'பள்ளி, கல்லூரி அருகே இருக்கும் 717 மதுபான கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட வேண்டும்' - விஜய் அதிரடி

post image

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அது குறித்து செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

"பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

டாஸ்மாக்
டாஸ்மாக்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் உத்தரவிடப்பட்டது.

மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்".

"அதிமுக உடைய நாங்கள் காரணமாக இருக்கமாட்டோம்" - எஸ்.பி.வேலுமணி சொல்கிறார்!

அதிமுகவில் தற்போது பழனிசாமி அணி vs சி.வி.சண்முகம் அணி என்கிற பிரிவு உண்டாகியுள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியைத் தாண்டி, சி.வி.சண்முகம் அணி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சட்டமன்றக் குழுத் தல... மேலும் பார்க்க

"ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிகளின் குரல் வலிமை பெற வேண்டும்" - சட்டசபையில் வன்னியரசு பேச்சு

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகை... மேலும் பார்க்க

'திமுக ஆதரவோடு முதலமைச்சராகலாம் என்றார் பழனிசாமி, பேரதிர்ச்சி; அதிமுக ஆதரவு.!' - சி.வி.சண்முகம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 'மூன்றாவது' இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், எழுந்த புகைச்சலில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலை... மேலும் பார்க்க

அரசு இல்லத்திலிருந்து வாடகை வீட்டில் குடியேறிய பினராயி விஜயன்; எதிர்க்கட்சித் தலைவராக மறுப்பா?

கேரளம் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சி.பி.எம் கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ள நில... மேலும் பார்க்க