செய்திகள் :

பழனி கோயில் நில மோசடி: ``அடுக்கடுக்கான கேள்வி; பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன" - CPM கே.பாலகிருஷ்ணன்

post image

பழனி ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் கட்சியின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``பழனியில் முருகன் கோயிக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் சென்றதும், கொடைக்கானலில் இருந்து வந்த அதிகாரி அன்றே பணியில் இணைந்து இந்தப் பதிவை மேற்கொண்டதும், ரூ.2 கோடி மதிப்புள்ள காசோலைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதிலும் பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பத்திரப்பதிவை ரத்து செய்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது நல்ல நடவடிக்கை என்றாலும், அமைச்சர், 'இது அறியாமல் நடந்த தவறு' என்று கூறுவது பொதுமக்களிடையே சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருப்பதும், கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும் இன்னும் யாரும் கைது செய்யப்படாததும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இம்முறைகேட்டில் முழுமையான விசாரணை நடத்தி, நிலத்தை மீட்க நீதிமன்றத்தை நாடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது.

மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்திலும், அரசு நிகழ்ச்சிகளிலும் 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆட்சிக்கு வந்த அனைவரும் ஊழலை ஒழிப்பதாகக் கூறினாலும், தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் இன்னும் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. வார்த்தைகளில் மட்டுமில்லாமல், ஊழலை முற்றாக ஒழிப்பதில் அரசு உறுதியோடு செயல்பட வேண்டும்.

பத்திரிகையாளர் விஜயன் மீது காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை அராஜகத்தின் உச்சம். அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்றார்.

டெல்லி அரசு மருத்துவமனையில் சட்டவிரோத காவலில் இருக்கும் சோனம் வாங்சுக்? - என்ன சொல்லப்படுகிறது?

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட 21 நாள்கள் ஆகிவிட்டன.அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்... மேலும் பார்க்க

அயோத்தி அறக்கட்டளை மோசடி: 'குற்றத்திற்கு பிறகு உங்கள் மொனம்.!' - மோடிக்கு கார்கே, ராகுல் கடிதம்

அயோத்தியில் ராமர் கோயில் அறக்கட்டளையில் முறைகேடு நடந்திருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு மாநிலங்களவை உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை தலைவர் ராகுல் காந்தி கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.அந்தக் கட... மேலும் பார்க்க

அமெரிக்காவை 'சாத்தான்' என்று விமர்சிக்கும் மொஜ்தபா; ஈரான் மக்களுக்கு விடுத்த கோரிக்கை என்ன?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இமாம் காமேனியும் உயிரிழந்தார்.இவர் அயோதுல்லா அலி காமேனிக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்பட்டவர் ஆவார்.இவருக்கான இரங்கல் க... மேலும் பார்க்க

'ரத்தத்திற்கு ரத்தம்' கேட்கும் ஈரான்; ட்ரம்ப் குடும்பம் மீது குறியா?

மிக பயங்கரமான போர்... தற்காலிக போர் நிறுத்தம்... அவ்வப்போது தாக்குதல்கள்... புரிந்துணர்வு ஒப்பந்தம்... போர் நிறுத்தம்... மீண்டும் போர் - இப்படியாக தொடர்கிறது ஈரான், அமெரிக்கா இடையிலான போர்.ஈரான் போர் ... மேலும் பார்க்க

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க