செய்திகள் :

சென்னை: ரெளடி கருப்பு, போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கைது: நாட்டு வெடிகுண்டு பறிமுதல் - என்ன நடந்தது?

post image

சென்னையில் உள்ள திருமுடிவாக்கத்தைச் சேர்ந்தவர் கருப்பு (எ) தமிழ் அழகு.

இவர் மீது கொலை வழக்குகள் உள்பட 19 வழக்குகள் உள்ளன. இதனால், இவர் காவல்துறையின் 'A' பிரிவு பட்டியலில் இருக்கும் ரெளடி ஆவார்.

கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், அடிதடி தான் இவரின் பிரதான தொழில்கள்.

கருப்பு குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு அருகே உள்ள மைதானத்தில் கஞ்சா விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கருப்பு
கருப்பு

இதனையடுத்து போலீசார் கருப்பை பிடிக்க சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கே கருப்பு மற்றும் ஓட்டேரியைச் சேர்ந்த ஆகாஷ் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.

தங்களைப் பிடிக்க போலீஸ் வந்துள்ளது என்பதை தெரிந்ததும், இருவரும் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீச முயன்றுள்ளனர்.

பின்னர் கருப்பு தலைமை காவலர் விஜயகுமாரை வலது கையில் வெட்டிவிட்டு தப்ப முயன்றிருக்கிறார்.

தப்பித்துவிடக் கூடாது என்பதால், திருமுடிவாக்கக் காவல் ஆய்வாளர் இருப்பின் வலது கணுக்காலில் சுட்டுப் பிடித்திருக்கிறார்.

முதலில் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பு, தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.

கருப்பு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேலம்: தலைக்கேறிய போதை; விபத்தை ஏற்படுத்திவிட்டு தீப்பொறி பறக்கச் சென்ற கார் - வைரலாகும் வீடியோ!

சேலம் மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. கஞ்சாவில் தொடங்கி போதை மாத்திரை, ஊசிகள் வரை பல்வேறு போதைப் பொருள்களுக்கு இளைஞர்கள் அடிமயாகி வருகின்றனர். போ... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; கரூரில் கைப்பற்றப்பட்ட அதிக பணம்! - நடந்தது என்ன?

தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் அதிரடி சோதனை நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில், கணக்கில் வராத ரூ.82.10 லட்சம் சிக்கியள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: கடன் தர மறுத்த மூதாட்டி கொலை... காதணியுடன் தப்பிய கொலையாளி கைது!

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் அம்மாள் (70). கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வரும் ஆறுமுகம் அம்மாளை அவரது மூத்த மகள் செல்வம் என்பவர் பராமரித்து வருகிறார். கடந்த 16... மேலும் பார்க்க

அதிகரிக்கும் 'Boss Scam' மோசடி: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு செபி அவசர எச்சரிக்கை!

நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) மற்றும் மூத்த அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, ஊழியர்களிடம் பணம் பறிக்கும் 'பாஸ் ஸ்கேம்' மோசடிகள் இந்தியாவில் அண்மைக்காலமாக பெருமளவில் அதிகரித்து வருகி... மேலும் பார்க்க

ITR: '3000 பேரைப் பயன்படுத்தி ரூ.357 கோடி மோசடி'- வருமான வரித்துறையை மிரள வைத்த உத்தரப்பிரதேசப் பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண் திட்டமிட்டு நாடு தழுவிய அளவில் நடத்திய மிகப் பெரிய போலி வருமான வரி மோசடியை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. க... மேலும் பார்க்க

'டிராக்டர் வாடகைய கொடுக்கல' - கணவனைத் தண்டிக்க மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

மகாராஷ்டிராவில் இப்போது பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். உழவு பணிகளுக்கு அதிக அளவில் டிராக்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வாறு வாடகைக... மேலும் பார்க்க