செய்திகள் :

ITR: '3000 பேரைப் பயன்படுத்தி ரூ.357 கோடி மோசடி'- வருமான வரித்துறையை மிரள வைத்த உத்தரப்பிரதேசப் பெண்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண் திட்டமிட்டு நாடு தழுவிய அளவில் நடத்திய மிகப் பெரிய போலி வருமான வரி மோசடியை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நான்சி அகர்வால் என்பவர், போலி வரி விலக்கு ஆவணங்கள் மூலம் ரூ.357 கோடி மதிப்பிலான முறைகேடுகளைச் செய்துள்ளார்.

இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குச் சுமார் ரூ.65.5 கோடி அளவிலான போலி வருமான வரி ரீஃபண்டைப் பெற்றுத் தந்துள்ளார்.

மீரட்டில் 225 சதுர அடி குடிசையில் தனது பெற்றோர் மற்றும் தம்பியோடு வசித்து வரும் நான்சி அகர்வால் வீட்டிலிருந்தே இந்த மோசடியை நடத்தியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு சிறிய நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றிய தனது அனுபவத்தைப் பயன்படுத்தி, வருமான வரித்துறையின் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளை அவர் தனக்கு சாதகமாக்கி இம்மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

மோசடி
மோசடி

அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80GGC-ஐ திட்டமிட்டு தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

இந்தப் பிரிவின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு பெற முடியும். அகர்வால் தனது வாடிக்கையாளர்களின் பெயரில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத சிறிய அரசியல் கட்சிகளுக்குப் பெருமளவில் நன்கொடை வழங்கியது போன்ற போலி ஆவணங்களைத் தயாரித்து, அதன் மூலம் பெரும் தொகையை வருமான வரி ரீஃபண்டாகப் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் வாடிக்கையாளர்களைப் பெற தள்ளுபடி போன்ற சலுகைகளை வழங்கியுள்ளார். அதோடு தனது மோசடி நடவடிக்கையை விரிவுபடுத்த, புதிய வாடிக்கையாளர்களை அழைத்து வரும் நபர்களுக்குச் சிறப்புத் தள்ளுபடிகளையும் அவர் வழங்கியுள்ளார்.

மேலும், தகுதியற்ற நபர்கள் போலி வருமான வரித் தாக்கல் (ITR) செய்யத் தூண்டியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையின் மீரட் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் இந்தப் பல கோடி ரூபாய் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தச் சோதனையில் ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ.4 கோடி மதிப்பிலான பிக்சட் டெபாசிட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் 'Boss Scam' மோசடி: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு செபி அவசர எச்சரிக்கை!

நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) மற்றும் மூத்த அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, ஊழியர்களிடம் பணம் பறிக்கும் 'பாஸ் ஸ்கேம்' மோசடிகள் இந்தியாவில் அண்மைக்காலமாக பெருமளவில் அதிகரித்து வருகி... மேலும் பார்க்க

'டிராக்டர் வாடகைய கொடுக்கல' - கணவனைத் தண்டிக்க மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

மகாராஷ்டிராவில் இப்போது பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். உழவு பணிகளுக்கு அதிக அளவில் டிராக்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வாறு வாடகைக... மேலும் பார்க்க

கீழே விழுந்த கைப்பை; பைக்கை நிறுத்திய கணவன்; விரட்டிக் கொன்ற காதலன்; ஆந்திராவில் கொடூரம்

தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி அருகில் உள்ள சூளகிரியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹாசினி (19). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சம்பவத்தன... மேலும் பார்க்க

'விவாகரத்தானவர் எனத் தெரிந்ததால்...' - காதலை முறித்த மாணவி; குத்திக்கொன்ற காதலனின் சகோதரர்

பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா என்ற சட்டக்கல்லூரி மாணவி தனுஷ் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். தனுஷ் தனக்கு ஏற்கனவே விவாகரத்தானதையும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து காதலித்து வந்தார். ஆனால் இத... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க