உ.பி.: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்பு
பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி
பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு ட்ரோன் தாக்குதல் நடத்தியது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோருடன் இணைந்து விளக்கமளித்தார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களில் மே 8, 9ஆம் தேதி நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தை ட்ரோன்களையும் அழித்தொழித்தது. இதில், பாகிஸ்தான் ட்ரோன்கள் ஜம்மு-காஷ்மீரில் தாக்கியதில் ஒரு குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் புதுதில்லியில் இன்று காலை 10.50 மணியளவில் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், “சூரத்கர், ஆதம்பூரில் தாக்குதல் நடத்தப்பட்டு ஏவுகணை அமைப்பு எஸ்-400 சேதமடைந்தது என்பது முற்றிலும் பொய்யான தகவல். ஜம்மு-காஷ்மீரில் அரசு அதிகாரி பாகிஸ்தானின் தாக்குதலில் காயமடைந்து உயிரிழந்திருக்கிறார்.
மக்கள் வாழும் வசிப்பிடங்கள், குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறது. பாகிஸ்தானின் தூண்டுதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. மேலும், இந்திய ஏவுகணை ஆப்கானிஸ்தானைத் தாக்கியதாகவும் பொதுடா” எனத் தெரிவித்தார்.