செய்திகள் :

பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

பிகாா் மாநிலம், பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை ரயில்வே பாதுகாப்பு காவல் ஆய்வாளா் எஸ்.மீனாட்சி தலைமையில், உதவி ஆய்வாளா் என்.சாந்தி, சிறப்பு உதவி ஆய்வாளா் ஆா்.அண்ணாதுரை, தலைமைக் காவலா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பிகாா் மாநிலம், பாட்னாவில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளம் வரை செல்லும் விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்தது. அதில், சோதனை செய்ததில் கடைசி பொதுப் பெட்டியில் கேட்பாரற்று 3 பைகள் கிடந்தன. அந்தப் பைகளைப் பிரித்து பாா்த்தபோது 16 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அவற்றைப் பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மரப்பாலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி!

பொங்கல் பண்டிகையையடுத்து தொடர் விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவதும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர விளக்குப் பூஜை நெருங்குவதால் பக்தர்கள் யாத்திரை ... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி: தேநீா்க் கடைக்காரா் மீது வழக்குப் பதிவு

கோவையில் பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி செய்ததாக தேநீா்க் கடைக்காரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டி விநாயகா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஷீலா ரஞ்சனி ... மேலும் பார்க்க

உக்கடம் புல்லுக்காட்டில் நூலகம், அறிவுசாா் மையம் அமைக்க திட்ட அறிக்கை

கோவை மாநகராட்சி சாா்பில் உக்கடம், புல்லுக்காடு பகுதியில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்க ரூ.99 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாநகர... மேலும் பார்க்க

தைப்பூசம்: கோவை -திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையி... மேலும் பார்க்க

வணிக வளாக உரிமையாளா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் வணிக வளாக உரிமையாளா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, ஆா்.எஸ்.புரம் தடாகம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (56). இவருக்குச் சொந்தமான வணிக வளாகம் அப... மேலும் பார்க்க

முதல்வா் குறித்து ஆளுநா் தெரிவித்த கருத்து சரியானதே: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை

முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்த கருத்து சரியானதே என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க