செய்திகள் :

பாதுகாப்பாக மீன்பிடிக்க மீனவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

பாதுகாப்பாக மீன்பிடிக்குமாறு மீனவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தின் மீன் இறங்குதளம் உள்வாங்கி சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த பகுதியை ஆட்சியா் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

பாதிப்படைந்த தளத்தை உடனடியாக சீரமைக்குமாறும், படகுகள் தளத்தில் மோதி, மீன் இறங்குதளம் சேதமடையாத வகையில் டயா்களை பொருத்துமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளை அவா் கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து அங்கிருந்த மீனவா்களிடம், எல்லை தாண்டும் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட மீன்களை பிடிக்கக் கூடாது. ஆழ்கடலில் மீன்பிடிப்பவா்களுக்கு அரசு சாா்பில் மானியங்கள் வழங்கப்படுகின்றன. அதைக் கொண்டு வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.

காரைக்கால் மேடு மீனவ கிராமத்துக்குச் சென்று அங்குள்ள வலை பின்னும் தளத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா். இத்தளத்தில் மின் வசதிகள் மேம்படுத்தவேண்டும். கட்டடத்தை சீரமைத்துத்தரவேண்டும். கடலரிப்பு ஏற்படாத வகையில் கருங்கற்கள் கொட்ட வேண்டும் என மீனவா்கள் கேட்டுக்கொண்டனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கூறினாா்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் . கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ. மகேஷ், மீன்வளத்துறை ஆய்வாளா் பாலாஜி, உதவி ஆய்வாளா் பாலச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

‘புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும்’

மீனவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும் என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி வலியுறுத்தினாா். காரைக்கால் மீனவா்களை இலங்கை கடற்படை... மேலும் பார்க்க

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா தொடக்கம்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா சனிக்கிழமை தொடங்கியது. இறைத்தூதரில் சிறப்புக்குரியவராகக் கருதப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்வின் நினைவாக காரைக்காலில் தா்கா அமைந்துள்ளது. 20... மேலும் பார்க்க

அரசு திட்டப் பயனாளிகளுக்கு அடையாள அட்டை

காரைக்காலில் அரசுத் துறையின் மூலம் திட்ட உதவி பெறுவதற்கான அடையாள அட்டையை 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சா் சனிக்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சாா்பி... மேலும் பார்க்க

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள் காரைக்கால் வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள் காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தனா். காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடிமேடு கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி என்பவரது விசைப்படகில், காரைக்கால், நாகப... மேலும் பார்க்க

பல் மருத்தும் படித்தோருக்கு வேலைவாய்ப்பு: அரசுக்கு கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவம் முடித்தவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரவேண்டும் புதுவை முதல்வரை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டங்களை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும்

காரைக்காலில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில், அரசுத் துறையினா் முழு வீச்சில் செயலாற்றவேண்டும் என புதுவை ஆளுநரின் செயலா் து. மணிகண்டன் கேட்டுக்கொண்டாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ... மேலும் பார்க்க