செய்திகள் :

`புதுச்சேரி பாஜக-வில் நீண்டகால தலைவர்’ - தவெகவில் தஞ்சமடைய என்ன காரணம்? யார் இந்த சாமிநாதன்?

post image

யார் இந்த சாமிநாதன் ?

த.வெ.க தலைவர் விஜய் முன்னிலையில் அவரின் பனையூர் அலுவலகத்தில், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று அக்கட்சியில் இணைந்தார். அதேபோல அந்த விழாவில் புதுச்சேரி பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் காரைக்கால் தெற்கு தொகுதியின் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அசனா இருவரும், விஜய் முன்பு அக்கட்சியில் இணைந்தனர்.  

புதுச்சேரி லாஸ்பேட் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன், கடந்த 2015 முதல் 2023 வரை பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருந்தவர். புதுச்சேரி பா.ஜ.க-வில் நீண்டகாலம் தலைவராக நீடித்தவர். 2017-ல் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் கடுமையான அதிகார மோதல் நிகழ்ந்து கொண்டிருந்த நேரம் அது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக் கொள்ளலாம் என்பது விதி. மாநில அரசுதான் அதை எப்போதும் நியமித்துக் கொள்ளும். அதன்படி அப்போது அதற்கான முயற்சியை மேற்கொண்டார் முதல்வர் நாராயணசாமி.

பனையூரில் சாமிநாதன், அசனா

ஆனால் எந்தவித முன்னறிவிப்புமின்றி இரவோடு இரவாக, பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேருக்கு ரகசியமாக நியமன எம்.எல்.ஏ-வாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் கிரண்பேடி. அதில் ஒருவர்தான் இந்த சாமிநாதன்.

தற்போது ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கும் செல்வகணபதி, மறைந்த அக்கட்சியின் முன்னாள் பொருளாளர் சங்கர் போன்றவர்களும் அந்த ரகசிய பதவிப் பிராணத்தின் மூலம் எம்.எல்.ஏ ஆனவர்கள்.

அதுவரை எந்த சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றிபெறாத மூவரும், புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் எம்.எல்.ஏ-க்களாக அமர்ந்தனர்.  அதன்பிறகு 2021-ல் ராஜ்யசபா எம்.பி-யாக நியமிக்கப்பட்ட செல்வகணபதியை, 2023-ல் புதுச்சேரி மாநிலத் தலைவராக அறிவித்தது பா.ஜ.க தலைமை.

பாஜக-வில் ஓரம் கட்டப்பட்ட சாமிநாதன்

அவர் தலைவர் பதவிக்கு வந்ததும் முதலில் செய்தது முன்னாள் தலைவர் சாமிநாதனை டம்மியாக்கியதுதான். எட்டு ஆண்டுகள் சாமிநாதனால் பொறுப்புகள் பெறப்பட்டவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பதவிகளைப் பறித்து ஓரம் கட்டினார் செல்வகணபதி.

அதேபோல கட்சி தொடர்பான எந்தக் கூட்டங்களுக்கும் சாமிநாதனுக்கு தகவலாகக் கூட சொல்லாமல், அவரை புறக்கணித்தார் செல்வகணபதி. கட்சியைப் பொறுத்தவரை `ஆக்டிவ்’ தலைவராக வலம் வந்த சாமிநாதன், தலைவர் பதவி பறிக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டதால் வெறுத்துப் போனார்.

அதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சன அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அதனால் கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்ததால், சாமிநாதனை அமைதியாக இருக்கும்படி கட்டளையிட்டது பா.ஜ.க தலைமை.

தமிழக வெற்றிக் கழகம் விஜய்

அதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ என்ற பெயரில், அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு த.வெ.க தலைவர் விஜய்யை அவரது பனையூர் இல்லத்தில் சந்தித்து கட்சியில் இணைந்தார் சாமிநாதன்.

ஆனால் அது தொடர்பான புகைப்படங்களோ, அதிகாரப்பூர்வ அறிக்கையோ த.வெ.க-வில் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் இன்று பனையூரில் நடைபெற்ற விழாவில் விஜய் முன்பு கட்சியில் இணைந்திருக்கிறார். அவருடன் சென்ற மற்றொருவர் காரைக்கால் தெற்கு தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ அசனா.

கடந்த 2021 தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்திற்காக, புதுச்சேரியில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்றது அ.தி.மு.க. இனிமேலும் அந்தக் கட்சியில் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த அசனா, த.வெ.க வண்டியில் ஏறிவிட்டார்.!

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய... மேலும் பார்க்க

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரச... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில... மேலும் பார்க்க