செய்திகள் :

புதுச்சேரி: 8 மணி நேரம் `ரோடு ஷோ’... தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்ட இடங்கள் என்னென்ன?

post image

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.

அந்த வரிசையில் தவெக தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். கரூரில் அவர் நடத்திய ரோடு ஷோவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்காக த.வெ.க தலைவர் விஜய் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், குறிப்பிட்ட மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவத்திற்கு ஆளும் கட்சிதான் காரணம் என்று குற்றம் சுமத்தி, தி.மு.க-வை கடுமையாக விமர்சித்திருந்தார்.

புதுச்சேரி
புதுச்சேரி

இந்த நிலையில்தான் த.வெ.க தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்காக அந்தக் கட்சியினர் அனுமதி கேட்டு புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்திருக்கின்றனர்.

அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாக சென்று மக்களை சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேபோல அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெறும் இந்த ரோடு ஷோவில், உப்பளம் சோனாம்பாளையம் பகுதியில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!

அதிமுகவில் இருந்து எடப்பாடியால நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் தந்திரு... மேலும் பார்க்க

சீன விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் தடுத்து நிறுத்தம்: சீனாவின் பதிலுக்கு இந்தியா கண்டனம்

சீனாவின் நடவடிக்கை"நவம்பர் 21, 2025-ம் தேதியில் நான் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால், என்னுடைய இந்திய... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `குப்பை கிடங்கில் முறைகேடு வழக்கு' - முன்னாள் ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார். இவர் தஞ்சாவூரில் பணியாற்றிய போது மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இடத்தை தனி நபர்களிடம் இருந்து மீட்டார். துணிச்சலான இவரது செயல் அப்போத... மேலும் பார்க்க

'தவெக-வில் இணைகிறீர்களா?' - மனம் திறந்த செங்கோட்டையன்

அதிமுக-வில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவராக வலம் வந்தவர் செங்கோட்டையன். அதிமுக வரலாற்றில் அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சுற்றுப்பயணம... மேலும் பார்க்க