பெங்களூரு- நாகா்கோவில் விரைவு ரயிலில் மது கடத்தல்: 3 போ் கைது
பெங்களூரு- நாகா்கோவில் விரைவு ரயிலில் மதுபாட்டில், புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளா் பிரியா மோகன் மேற்பாா்வையில் பெங்களூரு நாகா்கோவில் ரயிலில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, சில பயணிகள் மதுபாட்டில்கள், புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்தது தெரியவந்ததாம். இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்டம், கீழக்கல்குறிச்சியைச் சோ்ந்த சுந்தா்சிங் மகன் சச்சின் (22), தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரத்தை சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் செல்வராஜ் (38), தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சோ்ந்த ஜெகநாதன் மகன் முத்துராமன் (34) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள், புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.