செய்திகள் :

பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!

post image

மகாராஷ்டிரத்தின் ஜால்னா மாவட்டத்தில் பெற்றோர் வீட்டில் 2 மாதங்களாக சங்கிலியால் கட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.

ஜால்னாவின் ஆலப்பூர் கிராமத்தில், ஷேனாஸ் (எ) சோனால் என்ற இளம்பெண் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி வேறுவொரு மதத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த திருமணத்தின் மூலம் அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது பெற்றோரை சந்திப்பதற்காக குழந்தையுடன் ஷேனாஸ் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். வேறொரு மதத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதினால் விரக்தியிலிருந்த அவரது பெற்றோர் அந்த இளம் பெண்ணை திரும்பச் செல்ல அனுமதிக்காமல் அவர்களது வீட்டில் சங்கிலியில் கட்டி சிறை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க: ரூ.24 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்! ஜெர்மானியர் கைது!

அந்த பெண்ணை மீட்டு வர அவரது கணவர் பல முறை முயற்சி செய்தும் அவர்கள் அந்த இளைஞரை வீட்டிற்குள் அனுமதிக்காததினால், அவர் பாம்பே உயர் நீதிமன்ற கிளையான அவுரங்காபாத் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஷேனாஸின் பெற்றோரின் வீட்டில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு சிறை வைக்கப்பட்டிருந்த அந்த இளம் பெண்ணையும் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அவரது குழந்தையையும் மீட்டுள்ளனர். பின்னர், அவர்கள் இருவரும் அரசு வழக்கறிஞர் மூலம் அவரது கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து, ஷேனாஸின் பெற்றோரின் மீது தற்போது வரை எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், அந்த பெண் புகாரளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"பிஜாப்பூரில் மிகப்பெரிய வெற்றி": பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு

புதுதில்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்காக பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்துள்... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: மத்திய அரசின் அதிர்ச்சி பதில்

புது தில்லி: உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் சோ்ந்த இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளாா்.இது த... மேலும் பார்க்க

மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கருத்து சொல்லக் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஷ்

திருச்சி: மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கே. பழனிசாமி, ஈரோடு இடைத்தோ்தலில் போட்டியிடாமல் கருத்து சொல்வது கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில... மேலும் பார்க்க

தில்லியை பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்: கிரண் பேடி

புது தில்லி: "தில்லியை ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்" என்று புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வ... மேலும் பார்க்க

ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம்: பிரியங்கா கக்கா்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக தில்லி மக்கள் அளித்த ஆதரவிற்கு ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க

குடியிருப்பு கட்டடத்தில் தீ! பெண் பலி..ஒருவர் படுகாயம்!

மகாராஷ்டிர மாநிலம் தாணேவிலுள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீயினால் பெண் ஒருவர் பலியானார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாணேவின் எனஐபிஎம் சாலையிலுள்ள சன்ஸ்ரீ குடியிர... மேலும் பார்க்க