செய்திகள் :

மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்: போராட்டம், கல்வீச்சில் ஈடுபட்ட மக்கள் - டெல்லியில் நிலவிய பதற்றம்!

post image

டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் ஃபைஸ் எலாஹி மசூதிக்கு அருகில் உள்ள நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீஸார் என 300 பேர் வந்து ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மசூதிக்கு வரும் சாலைகள் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் மசூதிக்கு வெளியில் கூடி நின்று இடிப்புக்கு எதிராக கோஷமிட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டம் மற்றும் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் போலீஸார் கூட்டக்த்தை கலைக்க கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். பொதுமக்கள் தடுப்பை உடைத்துக்கொண்டு இடிக்கும் பகுதிக்குச் செல்ல முயன்றனர். அவர்கள்மீது போலீஸார் லேசாகத் தடியடி நடத்தினர். பொதுமக்கள் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் சில போலீஸார் காயமடைந்தனர். சட்டவிரோதமாக ஹால் ஒன்றும், மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டு இருந்தது. அவை இரண்டும் இடிக்கப்பட்டன.

பாதுகாப்புப் பணியில் போலீஸார்

கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

ஒரே நேரத்தில் 30 புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு சட்டவிரோதக் கட்டுமானங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் ராம்லீலா மைதானம் அருகில் இருக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி மாநகராட்சிக்கு மூன்று மாதங்கள் அவகாசம் கொடுத்து இருந்தது. அதனடிப்படையில் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை: நகைக்காகக் பெண் கொலை - இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55). இவரின் மனைவி அமுதா (53). கடந்த 8-ம் தேதி மாலை சீனிவாசனின் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அதோடு வீட்டுக்குள் இருந்து புகையும... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ஜாமீனில் வந்த 21 நாள்களில் கணவன் - மனைவி வெட்டி படுகொலை; பின்னனி என்ன?

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 41). மீன் வியாபாரி. இவர் நேற்று கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிளில் நத்தத்திலிருந்து திண்டு... மேலும் பார்க்க

சேலத்தில் மருத்துவ மாணவி கொலை; காதல் விவகாரமா? தந்தையைத் தேடும் போலீஸ்! - நடந்தது என்ன?

சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷின... மேலும் பார்க்க

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அ... மேலும் பார்க்க