செய்திகள் :

'மஞ்சள் முதல் பழங்கள் வரை; இயற்கையில் மலர்ந்த விநாயகர்!' - 'Vikatan Organic Vinayagar Contest 2026'

post image

விநாயகர் சதுர்த்தி என்றாலே விநாயகரை விதவிதமாக அலங்கரிப்பது வழக்கம். ஆனால், இயற்கையில் கிடைக்கும் பொருள்களையே விநாயகராக மாற்றினால்? இந்தக் கேள்விக்கான அழகான பதிலாக அமைந்தது, விகடன் நடத்திய 'Organic Vinayagar Contest 2026'!

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, செப்டம்பர் 11 முதல் 14 வரை நடைபெற்ற இந்த டிஜிட்டல் போட்டிக்கு கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே பிரமிக்க வைத்தது. இந்தியா முழுவதிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்து குவிந்ததோடு, எல்லைகளைக் கடந்து கனடாவிலிருந்தும் ஒரு பதிவு வந்தது.

இந்தப் போட்டியின் ஹைலைட்டே பங்கேற்பாளர்களின் கற்பனைதான்!

பரிசுக்குத் தேர்வான ஐந்து படங்கள்

Organic Vinayagar Contest
Organic Vinayagar Contest
Organic Vinayagar Contest
Organic Vinayagar Contest
Organic Vinayagar Contest

மஞ்சள், பூக்கள், இலைகள், பருப்பு வகைகள், அரிசி மாவு, கோதுமை மாவு, களிமண், வெல்லம் என இயற்கைப் பொருள்கள் ஒவ்வொன்றும் விநாயகர் உருவம் பெற்றன. அதிலும், பழங்களைச் செதுக்கி உருவாக்கப்பட்ட விநாயகர்கள் பார்த்தவர்களை வியக்க வைத்தன.

"இதையும் வைத்து விநாயகர் செய்ய முடியுமா?" என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு ஒவ்வொரு படைப்பிலும் புதுமை! குறிப்பாக, குழந்தைகள் காட்டிய உற்சாகமும் கற்பனைத்திறனும் இந்தப் போட்டிக்கு தனி அழகு சேர்த்தன. வீட்டில் கிடைத்த பொருள்களை வைத்தே தங்களுடைய கற்பனையில் விநாயகரை உருவாக்கிய குட்டீஸின் படைப்புகள், கலைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை அழகாகச் சொல்லின.

ஒருபுறம் பக்தி மற்றும் பாரம்பர்யம்... மறுபுறம் படைப்பாற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அக்கறை... இவை நான்கையும் ஒன்றாக இணைத்ததுதான் இந்த Organic Vinayagar Contest-ன் தனிச்சிறப்பு.

டிஜிட்டல் தளத்தில் நடைபெற்றாலும், அதன் வரவேற்பு நாடு கடந்து சென்றது. 300+ பதிவுகள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல; இயற்கையோடு இணைந்து பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்ற மக்களின் ஆர்வத்துக்கான சாட்சி!

போட்டியில் கலந்துகொண்டு கருத்தை கவர்ந்த விநாயகர் படங்கள்

Organic Vinayagar Contest

இந்தப் படைப்பாற்றல் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில் RMKV பரிசு ஸ்பான்சராக இணைந்திருந்தது. மண்ணிலிருந்து மஞ்சள் வரை... பூக்களிலிருந்து பழங்கள் வரை... இயற்கை தந்த ஒவ்வொரு பொருளிலும் விநாயகரைக் கண்ட இந்தப் போட்டி, கொண்டாட்டத்துக்கு ஒரு புது அர்த்தத்தையே தந்திருக்கிறது!

நீங்கள் செல்வந்தராக வேண்டுமா? வீட்டில் செல்வம் பெருகிட சாஸ்திர நூல்கள் சொல்லும் 9 எளிய வழிமுறைகள்!

1. இனிப்பு (கல்கண்டு): இனிப்பு பொருட்கள் மீது மிகுந்த பிரியத் துடன் வாசம் கொண்டிருப்பவள் லட்சுமி. கல்கண்டு, வெல்லம் போன்ற இனிப்புப் பொருள்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக் கும். ஆகவே, வீட்டில் ஏதேனு... மேலும் பார்க்க

திருமணம் தள்ளிப்போகிறதா... மதுரையில் நடக்கும் சுயம்வர பார்வதி ஹோமத்தில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!

மதுரையில் வரும் 17 ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்த நாளில் லட்சக்கணக்கானவர்கள் மதுரையில் திரள்வார்கள். அப்படிப்பட்ட புண்ணியமான நாளில் விகடனும் வாசகர்களி... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: 12 ராசிகளுக்கும் பிரத்யேக விநாயகர் வழிபாடு! எந்த ராசிக்கு என்ன வழிபாடு?

மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு, 12-ல் சனி. மேலும் ராகுவும் கேதுவும் சஞ்சரிக்கும் நிலைப்படி. வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள், அம்மன் கோயிலில் அருளும் விநாயகருக்குப் பாலபிஷேகம் செய்யவேண்டும... மேலும் பார்க்க

ஆபரண யோகம் தரும் சுவர்ண கெளரி பூஜை: விநாயகர் சதுர்த்திக்கு முன்பு செய்யவேண்டிய அம்பாள் பூஜை!

நம் நாட்டில் முக்கியமான பண்டிகை தினங்களை ஒட்டியவாறு அமையும் கௌரி விரதங்களைப் பெண்கள் நோற்பது வழக்கம். கௌரியின் திருவடிவங்கள் 108. இவை அனைத்திற்கும் தனித் தனியான பூஜை முறைகள் உண்டு. ஆயினும், நம் முன்னோ... மேலும் பார்க்க

Anbe Sivam - 3 | மரணத்தில் இட ஒதுக்கீடு கேட்டவர்| அன்பே சிவம் | தவத்திரு பொன்னம்பல அடிகளார்!

இன்றைக்கெல்லாம் எல்லாவற்றுக்கும் ஒரு தினம் வந்துவிட்டது. அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், நண்பர்கள் தினம் என்று பல்வேறு தினங்களைக் கொண்டாடுகிறோம். காலம் முழுவதும் நிலைத்திருக்க வேண்டிய உற... மேலும் பார்க்க

ஈசன் அம்பிகையைத் திருமணம் செய்துகொண்ட தலத்தில் சுயம்வர பார்வதி ஹோமம்... திருமணம் கைகூடும்!

ஒவ்வோர் ஆலயத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. சில கடன் பரிகாரத்தலமாகத் திகழும். சில செல்வ வளம் அருளும். ஒருசில நோய் தீர்க்கும் தலமாகத் திகழும். சில தலங்கள் திருமண வரம் தரும் தலங்களாக அறியப்படும். அப்படித் ... மேலும் பார்க்க