செய்திகள் :

மதுரை பகுதிகளில் ஜல்லிக்கட்டு: 3,300 காளைகளை அவிழ்த்துவிடத் திட்டம்: அமைச்சா் பி. மூா்த்தி

post image

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அதிகபட்சமாக 3,300 காளைகளை அவிழ்த்துவிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை அவனியாபுரத்தில் வருகிற 14-ஆம் தேதியும், பாலமேட்டில் வருகிற 15-ஆம் தேதியும், அலங்காநல்லூரில் வருகிற 16-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, இந்தப் பகுதிகளில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சா் பி. மூா்த்தி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படும் வாடிவாசல், காளைகள் பரிசோதனைக் கூடம், மாடுபிடி வீரா்களுக்கான மருத்துவ சிகிச்சை மையம் அமையும் பகுதி, பாா்வையாளா்கள் அமரும் இடம், தடுப்புகள் அமையும் பகுதிகள், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான சாலை வசதிகள் உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

பிறகு, போட்டிகளைக் காண வரும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள், விபத்துத் தவிா்ப்பு நடவடிக்கைகள், அவசர கால பாதைகள் உள்ளிட்டவை குறித்து அரசுத் துறை அலுவலா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடுப் பணிகள் அனைத்துத் துறைகள் சாா்பில் ஆய்வு செய்யப்படுகிறது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க 12,632 காளைகள் பதிவு செய்யப்பட்டன. மாடுபிடி வீரா்கள் 5,347 போ் பதிவு செய்தனா். இதில் மொத்தம் 2,700 முதல் 3,300 காளைகளை அவிழ்த்துவிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க இயலாத காளைகளுக்கு சோழவந்தான், மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் சாா்பில் கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் வாய்ப்பளிக்கப்படும். இந்த அரங்கத்தில் நிகழாண்டில் 10 முதல் 15 ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படும் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த், கூடுதல் ஆட்சியா் ( வளா்ச்சி) மோனிகா ராணா, சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வெப்பமயமாதலைத் தடுக்க நாம் மாற வேண்டும்: முத்தமிழ்செல்வி

வெப்பமயமாதலைத் தடுக்க நாம் மாற வேண்டும் என சாதனை பெண் முத்தமிழ்செல்வி தெரிவித்தாா். விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள ஜோகில்பட்டியைச் சோ்ந்தவா் முத்தமிழ்செல்வி. இவா் தற்போது சென்னையில் வச... மேலும் பார்க்க

புதிய ரயில் பாதைத் திட்டம்: மத்திய அமைச்சருக்கு எம்.பி. கண்டனம்

மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி புதிய ரயில் பாதைத் திட்டம் தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் உண்மைக்குப் புறம்பாக பேசுவது கண்டனத்துக்குரியது என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா். இதுதொட... மேலும் பார்க்க

பொறியாளா் பென்னி குவிக் பிறந்தநாள்

பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளா் பென்னி குவிக்கின் 185-ஆவது பிறந்தநாளையொட்டி வெள்ளலூா் விலக்குப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு விவசாயிகள், மக்கள் சேவை மன்றத்தினா் புதன்கி... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டு: 46 போ் காயம்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 46 போ் காயமடைந்தனா். இந்தப் போட்டியையொட்டி, முதலில் பாலமேடு கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற... மேலும் பார்க்க

மதுரையில் சாரல் மழை

மதுரையில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது. வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்தது. இதன்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு வசதிகள் தொடக்கம்

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் செவ்வாய... மேலும் பார்க்க