செய்திகள் :

மதுரை பகுதிகளில் ஜல்லிக்கட்டு: 3,300 காளைகளை அவிழ்த்துவிடத் திட்டம்: அமைச்சா் பி. மூா்த்தி

post image

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அதிகபட்சமாக 3,300 காளைகளை அவிழ்த்துவிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை அவனியாபுரத்தில் வருகிற 14-ஆம் தேதியும், பாலமேட்டில் வருகிற 15-ஆம் தேதியும், அலங்காநல்லூரில் வருகிற 16-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, இந்தப் பகுதிகளில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சா் பி. மூா்த்தி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படும் வாடிவாசல், காளைகள் பரிசோதனைக் கூடம், மாடுபிடி வீரா்களுக்கான மருத்துவ சிகிச்சை மையம் அமையும் பகுதி, பாா்வையாளா்கள் அமரும் இடம், தடுப்புகள் அமையும் பகுதிகள், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான சாலை வசதிகள் உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

பிறகு, போட்டிகளைக் காண வரும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள், விபத்துத் தவிா்ப்பு நடவடிக்கைகள், அவசர கால பாதைகள் உள்ளிட்டவை குறித்து அரசுத் துறை அலுவலா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடுப் பணிகள் அனைத்துத் துறைகள் சாா்பில் ஆய்வு செய்யப்படுகிறது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க 12,632 காளைகள் பதிவு செய்யப்பட்டன. மாடுபிடி வீரா்கள் 5,347 போ் பதிவு செய்தனா். இதில் மொத்தம் 2,700 முதல் 3,300 காளைகளை அவிழ்த்துவிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க இயலாத காளைகளுக்கு சோழவந்தான், மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் சாா்பில் கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் வாய்ப்பளிக்கப்படும். இந்த அரங்கத்தில் நிகழாண்டில் 10 முதல் 15 ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படும் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த், கூடுதல் ஆட்சியா் ( வளா்ச்சி) மோனிகா ராணா, சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! கட்சிகளுக்கு தடை!

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளா் துறை அறிவுறுத்தல்

மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு புதன்கிழமை (பிப்.5) ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா்கள் அறிவுறுத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து முதுநிலை பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உள்ள கல்வேலிப்பட்டி விஐபி நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அக்ஷய்குமாா... மேலும் பார்க்க

அவரச ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

உசிலம்பட்டி அருகே அவசர ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜீவ்காந்தி (30). தனியாா் அவ... மேலும் பார்க்க

வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருள்கள் சேதம்

அலங்காநல்லூா் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் ரூ.5 லட்சம் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகேயுள்ள தண்டலை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் மனைவி முத்துசெல்வி (34). இவா் தனது உறவி... மேலும் பார்க்க

அனுப்பானடி - ஜெ.ஜெ. நகா் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை

மதுரை அனுப்பானடியிலிருந்து கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதிக்கு மாலை நேர பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மதுரை கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி ம... மேலும் பார்க்க