செய்திகள் :

திருமணம் மீறிய உறவு; வீட்டுக்குள் இருந்தவர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி!

post image

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் (60). சோப்பு பவுடர் விற்பனை செய்து வந்தார். இவர் மனைவி அமுதா (50). இவர்களது மகன் சிவராஜ், மகள் சிவரஞ்சனி. இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. சிவராஜ் தனது மனைவியுடன் திருப்பூரில் வசிக்கிறார். சிவரஞ்சனி கணவர் வீட்டில் வசிக்கிறார்.

வீடு

அமுதாவின் உடன் பிறந்த சகோதரி கண்ணம்மா (60). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கண்ணம்மாவுக்கும், சிதம்பரத்திற்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிதம்பரம் வீட்டில்தான் கண்ணமாவும் வசித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கண்ணம்மாவும், சிதம்பரமும் சேர்ந்து, அமுதாவை கண்டபடி பேசி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனராம். இதனால் அமுதா மன உளைச்சலில் இருந்துள்ளார்.

கணவரும் தனது சகோதரியும் திருமணம் மீறிய உறவில் இருப்பது அமுதாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் சிதம்பரத்திடம் சண்டை போட்டு வந்துள்ளார். அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை நடக்குமாம். அப்போது சிதம்பரம், கண்ணம்மா இருவரும் அமுதாவை கொடுமைப்படுத்துவார்களாம். 2-ம் தேதி மாலையும் இதுபோல் சண்டை நடந்ததாகச் சொல்கிறார்கள்.

தீ வைத்த வீடு

இதனால் இருவர் மீதும் அமுதா கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். அப்போது கணவர் சிதம்பரம், சகோதரி கண்ணம்மா இருவரையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்து திட்டம் போட்டுள்ளார் அமுதா. இதையடுத்து இரவானதும் சிதம்பரம், கண்ணம்மா இருவரும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டபடி பெட்ரோல் வாங்கி வைத்திருந்துள்ளார் அமுதா. மேலும் இருவரும் தூங்கும் அறையின் வெளிப்பக்கத்தில் மூடியவர், வீட்டின் வெளிக் கதவையும் பூட்டி விட்டதாகச் சொல்கிறார்கள்.

இதையடுத்து ஜன்னல் வழியாக அறைக்குள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டார். மள மளவென அறை முழுக்கத் தீ பரவியது. தீ உள்ளுக்குள் இருந்த இருவர் மீதும் பற்றிக்கொள்ள... தாங்க முடியாமல் அலறியுள்ளனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

அமுதா

உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிராம மக்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர். பலத்த தீ காயமடைந்த சிதம்பரம், கண்ணம்மா ஆகிய இருவரையும் மீட்டு, சிகிசைக்காக சேர்த்தனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து பேராவூரணி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில், அமுதா இந்த படுபயங்கர காரியத்தை செய்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அமுதாவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். அப்போது, ``கடந்த 20 ஆண்டுகளாக திருமணம் மீறிய உறவில் இருந்து என்னை டார்ச்சர் செய்த இருவரையும் தீர்த்துக் கட்டிட்டேன். இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு" என்று அமுதா கூற, அதைக் கேட்டபோலீஸார் அதிர்ந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.

நெல்லை: மது போதையில் தந்தையை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற மகன்! - சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்

நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதியில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி என்ற மகேஷ் (வயது 43). இவர் பணம் கொடுக்கல், வாங்கல் செய்யும் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.அவரின் மனைவி கல்யாண... மேலும் பார்க்க

திருச்சி: மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள இருவர் - போலீஸ் தீவிர விசாரணை

திருச்சி, பொன் நகர் புது செல்வா நகரைச் சேர்ந்தவர் சால்மன் பார்ஷ் (வயது: 37). இவர், கடந்த 17 -ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் சென்றார். அங்கு, அவரது உடமைகளை குடியேற்ற பிரி... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை? டிரைவரைத் தாக்கிய உறவினர்கள்! - என்ன நடந்தது?

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவருடைய தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். அபோது, அந்தப் பகுதியில் அவருடைய தோழியின் தாயாரை சிவகங்கைக்கு அழைத... மேலும் பார்க்க

"இயற்கை உரம் போட்டு வளர்த்தேன்"- வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து சட்னி செய்து சாப்பிட்ட ஐடி மேலாளர்

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (26) என்பவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் 'டெக்னோபார்க்' வளாகத்தில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். ஐடி கம்பெனி மேலாளராகப் பதவி வகிக்கும் அவர்... மேலும் பார்க்க

கேரளம்: ஆண் நண்பருடன் சென்று வந்த மனைவியை கொலைசெய்த கணவன் - சோகத்தில் முடிந்த காதல் திருமணம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(46). வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஹசீனா(38). வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திரும... மேலும் பார்க்க

91 காயங்களுடன் சிதைந்த பிஞ்சு உடல்: கேரளாவை உலுக்கிய படுகொலை - தாயின் காதலன் வெறிச்செயல்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை, தாயின் காதலனால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் 91 காயங்கள் இருந்ததாக பிரேத... மேலும் பார்க்க