செய்திகள் :

"இயற்கை உரம் போட்டு வளர்த்தேன்"- வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து சட்னி செய்து சாப்பிட்ட ஐடி மேலாளர்

post image

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (26) என்பவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் 'டெக்னோபார்க்' வளாகத்தில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார்.

ஐடி கம்பெனி மேலாளராகப் பதவி வகிக்கும் அவர் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்துள்ளார். திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 17-வது மாடியில் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே காங்கிரஸ் அரசு வந்தபிறகு ​கேரள காவல் துறையினர் போதைப்பொருளுக்கு எதிராக 'ஆப்பரேஷன் தூபான்' என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது.

ஆப்பரேஷன் தூபான் டீம் ஐடி மேலாளர் விஷாலின் பிளாட்டில் அதிரடி சோதனை நடத்தியது. விஷாலின் படுக்கையறை ஜன்னல் ஓரத்தில் ஒரு மினி கஞ்சா தோட்டத்தையே அவர் அமைத்திருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். ​முட்டை வைக்கும் அட்டைப்பெட்டிகள் மற்றும் செடிகள் வளர்க்கும் சிறிய தொட்டிகள் எனச் சுமார் 70 கஞ்சா செடிகள் அங்கு வளர்ந்து நின்றன.

மேலும், 19 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. ​இதுபற்றி விஷாலிடம் விசாரணை நடத்தியதில், அவர் இதை விற்பனை செய்வதற்காக வளர்க்கவில்லை எனவும், தனது சொந்த தேவைக்காகவே வளர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கஞ்சா இலைகளை அரைத்து சட்னி செய்து சாப்பிடுவதாகவும், சில நேரங்களில் கஞ்சா இலைகளை அரைத்துப் பாலில் கலந்து குடிப்பதுமே எனது வழக்கம் என்றும் விஷால் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

​பகலில் ஐடி மேலாளராக வலம் வந்தவர், இரவில் தன் பிளாட்டிற்கு வந்து கஞ்சா செடிகளை வளர்த்து பல விதங்களில் சாப்பிட்டு போதையில் மிதந்துள்ளார். இதைத்தொடர்ந்து விஷாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

கஞ்சா வளர்த்ததால் கைதுசெய்யப்பட்ட விஷால்
கஞ்சா வளர்த்ததால் கைதுசெய்யப்பட்ட விஷால்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "​விஷால் குடியிருந்த பிளாட்டின் 17-வது மாடியில் சூரிய வெளிச்சம் நன்கு படும் ஜன்னல் ஓரங்களைத் தேர்ந்தெடுத்து கஞ்சா செடிகளை வளர்த்துள்ளார். கஞ்சா செடிகளின் வாசம் வெளியே தெரியாமல் இருக்க ரூம் ஸ்பிரே உள்ளிட்ட நறுமண பொருட்களையும் அவர் தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார்.

கஞ்சா செடிகளுக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களையே பயன்படுத்தியிருக்கிறார். ஆன்லைன் மூலமாகச் செடிகளுக்கான உரம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களைத் தொடர்ந்து ஆர்டர் செய்து வந்துள்ளார்.

அவர் ஆன்லைன் மூலம் உரங்கள் வாங்குவது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் நடத்திய விசாரணையின் காரணமாக கஞ்சா வளர்த்த இளைஞர் சிக்கியுள்ளார்.

கஞ்சா தோட்டம்
கஞ்சா தோட்டம்

கைது செய்யப்பட்ட விஷால் கஞ்சாவைப் புகைப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார். கஞ்சாவைப் புகைத்தால் அதன் வாசனை மூலம் பக்கத்து பிளாட்டுகளில் வசிப்பவர்களுக்கு எளிதில் சந்தேகம் வந்துவிடும் என்பதால், கஞ்சாவை சட்னியாக அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கல்லூரியில் பயிலும்போதே இந்தப் பழக்கம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ​ஐடி துறையில் உள்ள வேலைப் பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே இதைச் செய்ததாக அவர் கூறியுள்ளார். அதே சமயம், இவ்வளவு பெரிய அளவில் செடிகளை வளர்ப்பது சட்டப்படி கடுமையான குற்றமாகும். இதன் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறோம்" என்றனர்.

நெல்லை: மது போதையில் தந்தையை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற மகன்! - சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்

நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதியில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி என்ற மகேஷ் (வயது 43). இவர் பணம் கொடுக்கல், வாங்கல் செய்யும் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.அவரின் மனைவி கல்யாண... மேலும் பார்க்க

திருச்சி: மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள இருவர் - போலீஸ் தீவிர விசாரணை

திருச்சி, பொன் நகர் புது செல்வா நகரைச் சேர்ந்தவர் சால்மன் பார்ஷ் (வயது: 37). இவர், கடந்த 17 -ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் சென்றார். அங்கு, அவரது உடமைகளை குடியேற்ற பிரி... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை? டிரைவரைத் தாக்கிய உறவினர்கள்! - என்ன நடந்தது?

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவருடைய தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். அபோது, அந்தப் பகுதியில் அவருடைய தோழியின் தாயாரை சிவகங்கைக்கு அழைத... மேலும் பார்க்க

கேரளம்: ஆண் நண்பருடன் சென்று வந்த மனைவியை கொலைசெய்த கணவன் - சோகத்தில் முடிந்த காதல் திருமணம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(46). வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஹசீனா(38). வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திரும... மேலும் பார்க்க

91 காயங்களுடன் சிதைந்த பிஞ்சு உடல்: கேரளாவை உலுக்கிய படுகொலை - தாயின் காதலன் வெறிச்செயல்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை, தாயின் காதலனால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் 91 காயங்கள் இருந்ததாக பிரேத... மேலும் பார்க்க

மீன் தொட்டியைச் சுத்தம் செய்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; கோவை அருகே சோகம்

கோவை மாவட்டம் பேரூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மனைவி அங்கம்மாள். இவர்களது மகன் விஷ்வா (13) எட்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, சுண்டாக்காமுத்தூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ... மேலும் பார்க்க