செய்திகள் :

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அமைச்சர் ஐ.பெரியசாமி

post image

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.

பின் நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, ``100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 125 நாள்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. நான் அமைச்சராகப் பொறுப்பேற்று 2023 - 24ல் தமிழ்நாட்டில் 41 கோடி நபர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டு, ரூ.13000 கோடி பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்தியில் இருக்கும் அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை. அது வேண்டாத அரசாங்கம். அதனால் பேர் சொல்ல விரும்பவில்லை. பெயர் சொல்லாத என வைத்துக் கொள்ளுங்கள். தற்போது, அவர்கள் 12 கோடி பேருக்குத்தான் வேலை கொடுப்போம் எனக் கூறுகின்றனர். இதனால் உடன் பிறந்தவர்கள் பலர் பாதிப்பு அடைகின்றனர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி

வறுமை கோட்டிற்குக் கீழே கீழே இருப்பவர்களுக்குத்தான் கொடுப்போம் எனக் கூறுகின்றனர். வளர்ந்த மாநிலங்களுக்கு இனி கொடுக்க மாட்டார்களாம். மத்திய அரசு அம்பேத்கர் கொடுத்த மாநில சட்ட உரிமைகளைப் பறிக்க நினைக்கிறது.

பெயர் சொல்ல முடியாத அடக்குமுறை அரசு, மாற்றான் தாய் மனசு உள்ள அரசு மத்தியில் இருக்கிறது. இந்த அரசு தமிழ்நாட்டிற்கு கேடுதான் விளைவிக்கும்.

மத்திய அரசு நாளை உங்களிடம் வந்து பொய் மூட்டைகளைச் சொல்லும். அவர்களுக்கு மக்களிடம் ஓட்டு கேட்க எந்த தகுதியும் இல்லை. நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமமாக வாழ வேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும், சாதி, மதம் இருக்கக் கூடாது, ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் மந்திரிக்கு சட்டத்தில் இருக்கக்கூடிய உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்த உரிமையைப் பறிக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.

ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

பேரூராட்சிகளிலும் வீடு கட்டித் தர வேண்டும் என முதலமைச்சரிடம் பேசியுள்ளேன். அதையும் செய்வோம் எனக் கூறியுள்ளார். முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியுள்ளேன்” என்றார்.

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.செல்வப்பெருந்தகை பள்ளி விழா ... மேலும் பார்க்க

கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார்.இவர்கள் இருவரும் ... மேலும் பார்க்க

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 ... மேலும் பார்க்க

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில்... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க