செய்திகள் :

மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?

post image

ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது.

ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்கும் நீண்டுள்ளது.

துபாய் தனது விமானப் போக்குவரத்தை ஏற்கெனவே நிறுத்தியிருந்தது.

இந்த நிலையில், இப்போது உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீட்டர் புர்ஜ் கலீஃபாவில் அனைவரும் வெளியேற்றப் பட்டிருக்கின்றனர்.

இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டது..

ஈரான் மீதான தாக்குதல்
ஈரான் மீதான தாக்குதல்

காரணம், இங்கே தாக்குதல் ஏற்பட்டால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும். அதனால், முன்னரே அங்கே இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை புர்ஜ் காலிஃபாவின் அருகில் தாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கு புர்ஜ் காலிஃபா தான் இலக்கா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அக்கட்டடத்தின் அருகில் இருந்து கரும்புகை வெளிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் மத்திய கிழக்கின் பிற நாடுகளுக்கும் பரவுவதால் இந்தப் போர் இன்னும் பெரிதாகலாம் என அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல், அமெரிக்கா முதல் கட்டப் போரை 4 நாள்கள் வரை தொடரலாம் என்று கூறப்படுகிறது.

'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' - ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு

இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன.ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது.இந்தத் தாக்குதலில் க... மேலும் பார்க்க

US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பதில் தாக்குதலாக, ஈரானின் IRGC( Islamic Revolutionary Guards) படை, இஸ்ரேல் நோக்கி ஏவுகணைத் தாக்கு... மேலும் பார்க்க

”ஓபிஎஸ் வாங்கிய பட்டுபுடவைக்கு பணம் தரணும்; ஸ்டாலின் மீட்டுத் தருவாரா?” - பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் சிங்.செல்வராஜ்(65) அ.தி.மு.க நகரச் செயலாளரான இவர், திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். சோழன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவராகவும... மேலும் பார்க்க

நீளும் ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?' பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்

ஈரான் மீது போர் தொடுத்துள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும்.இன்று காலையில் இருந்து தொடர்ந்து வருகிறது இந்தப் போர்.ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் அலுவலகம், அணு ஆயுத பகுதிகள், ஈரானின் தலைநகரம் டெஹ்ரான் உள்ளி... மேலும் பார்க்க