செய்திகள் :

`மனைவியிடம் சொல்வேன்'- மிரட்டிய காதலி; கொன்று உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த கடற்படை அதிகாரி

post image

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவீந்திரா என்பவருக்கு டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் மோனிகா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் 2021ம் ஆண்டு அறிமுகமாகிக்கொண்டனர். அடிக்கடி விசாகப்பட்டினத்தின் பல பகுதிகளுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தனர். ரவீந்திரா கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். ரவீந்திராவிற்கு கடந்த 2024ம் ஆண்டு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து மோனிகாவுடனான தொடர்பை ரவீந்திரா தொடர்ந்தார். விடுமுறையில் வரும்போது மோனிகாவுடன் தியேட்டர், பார்க் போன்ற இடங்களுக்குச் சென்று வந்தார்.

இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்தது. ரவீந்திராவின் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோனிகாவை தனது வீட்டிற்கு அழைத்தார். வீட்டில் இருந்தபோது மோனிகாவிற்கும் ரவீந்திராவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ரவீந்திரா தன்னுடைய காதலியை கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார்.

ஆன்லைன் கத்தி ஆர்டர்

அதன் பிறகு ஆன்லைனில் ரவீந்திரா கத்தி ஒன்றை ஆர்டர் செய்து வாங்கினார். அக்கத்தியைப் பயன்படுத்தி மோனிகாவின் உடலை பல துண்டுகளாக வெட்டினார். தலை, கை, கால் பகுதிகளை தனித்தனியாக வெட்டி எடுத்தார். உடல் பகுதியை மட்டும் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் வைத்து அடைத்தார்.

மற்ற பகுதிகளை வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று அவற்றை எறித்துவிட்டார். அதன் பிறகு நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்று மோனிகாவை கொலைசெய்ததை போலீஸாரிடம் கூறி சரணடைந்தார். உடனே போலீஸார் ரவீந்திராவின் வீட்டிற்கு வந்து குளிர்சாதன பெட்டியில் இருந்த உடலை மீட்டனர்.

மனைவியிடம் சொல்வேன் என மிரட்டினார்

இது குறித்து ரவீந்திரா போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ''மோனிகா என்னிடம் ரூ.3.5 லட்சம் வாங்கினார். அப்படி இருந்தும் எங்களது உறவு குறித்து என் மனைவியிடம் கூறிவிடுவேன் என்று கூறி தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. தொடர்ந்து மிரட்டி துன்புறுத்தியதால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் கொலை செய்ய முடிவு செய்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். காணாமல் போன உடல் பகுதிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு டெல்லியில் ஸ்ரத்தா என்ற பெண்ணை அஃப்தாப் பூனாவாலா என்ற நபர் கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்திருந்தார். அவர்கள் இருவரும் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அஃப்தாப் இப்படுகொலையைச் செய்தார்.

சென்னை: பெண் டான்ஸ் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை - பதிவு நம்பரால் சிக்கிய இளைஞர்

சென்னையைச் சேர்ந்த கிளாசிக்கல் டான்ஸ் மாஸ்டரான இளம்பெண் ஒருவர் 21-ம் தேதி, அடையாறு சாஸ்திரி நகர் வழியாக பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ஆள... மேலும் பார்க்க

"வெளிநாட்டுப் பாணியில் காதலைச் சொல்கிறேன்" - காதலனைக் கட்டிவைத்து எரித்து கொன்ற பெண்; என்ன நடந்தது?

பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள அஞ்சனாபுரா பகுதியில் வசித்து வந்தவர் பிரேர்னா (27). இவர் அங்குள்ள மொபைல் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே கடையில் வேலை செய்து வந்த கிரண் என்பவரை பிரேர்னா காதலித... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த தாய்; 11 வயது மகனைக் கொன்று டிரம்மில் மறைத்த நபர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது கணவர் நாசிக்கில் வேலை செய்து வந்தார். ஆஷா வீட்டு வேலை செய்து வந்தார். ஆஷாவைக் கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த மதுரா(45) என்பவர் ... மேலும் பார்க்க

விருதுநகர்: தேர்தல் கால ஆர்டர்; விதிமீறல், அதிக பணிச்சுமை! பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த 19-ம்... மேலும் பார்க்க

காதலை கைவிட மறுப்பு: 16 வயது மகளை கொலை செய்து முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் தெரியாமல் செய்த தந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் விஜய் செளபே. இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். 10வது வகுப்பு படித்து வரும் அந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது விஜய்-க்கு தெரிய வந்தது. என... மேலும் பார்க்க

காதல் மனைவிமீது சந்தேகம், வீடு முழுக்க கேமரா; இரண்டு மகள்களைக் கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா (48). இவர்களுக்கு 11 வயதில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். பீகாரை... மேலும் பார்க்க