செய்திகள் :

மனைவி குறித்து பேசிய ரித்தேஷ் தேஷ்முக்; தேம்பி அழுத ஜெனிலியா - வைரலாகும் வீடியோ!

post image

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'ராஜா சிவாஜி'.

ரித்தேஷ் தேஷ்முக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 'ராஜா சிவாஜி' படத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருக்கிறார்.

மே 1 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஏப்ரல்.20) நடைபெற்றது.

ஜெனிலியா
ஜெனிலியா

அப்போது சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கதையை வெள்ளித்திரைக்குக் கொண்டு வருவதில் எதிர்கொண்ட சவால்களை ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் விவரித்திருக்கிறார்.

அதேசமயம் தனது கனவுக்கு தூணாக இருந்த ஜெனிலியாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் ரித்தேஷ் பேசுவதைக் கேட்டு, ஜெனிலியா தேம்பி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேடையில் ஜெனிலியா குறித்துப் பேசிய ரித்தேஷ் தேஷ்முக், "நான் கடந்த 2016ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். பத்து வருடங்கள் ஆகியும் அது நடக்கவில்லை. இடையில் மீண்டும் முயற்சித்தேன். ஆனால் கொரோனா காரணமாக முடியவில்லை.

கனவு காண்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். ஆனால் நீங்கள் கனவு காணும்போது யாராவது ஒருவர் உங்களுக்கு ஆதரவாகவும், உங்கள் மீது நம்பிக்கையும் வைத்திருக்க வேண்டும். அப்படி எனக்கு துணையாக நின்றவர் ஜெனிலியா.

ரித்தேஷ் தேஷ்முக் - ஜெனிலியா
ரித்தேஷ் தேஷ்முக் - ஜெனிலியா

என் மீது நம்பிக்கை வைத்து என்னுடைய கனவை நனவாக்கினார். நான் இயக்குநராக படங்களை இயக்கிக் கொண்டிருந்த நேரத்தில் எனக்காக பல தியாகங்களைச் செய்தார். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தார்.

அவரின் ஆதரவு இல்லை என்றால், இன்று 'ராஜா சிவாஜி' இவ்வளவு பிரமாண்டமாக உருவாகியிருக்காது. என் வாழ்க்கையிலும், இந்தத் திரைப்படத்திலும் அவர் ஆற்றிய பங்கை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது" என்று தெரிவித்திருக்கிறார்.

Hansika: 'காஸ்டிங் கௌச்' குறித்த கேள்விக்கு நடிகை ஹன்சிகாவின் பதில் - விவாதிக்கும் நெட்டிசன்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த செய்தியைத் தொடர்ந்து மீண்டும் தலைப்புச் செய்திக... மேலும் பார்க்க

"சினிமா வேண்டாம் என்று ரூ.4500 சம்பளத்தில் வேலை செய்கிறார்" - மகன் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் நடிகை டிவிங்கிள் கண்ணா தம்பதியின் மகன் ஆரவ் தனது 15 வயதில் லண்டன் சென்று பேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டு வந்தார். லண்டனில் படிக்கச் சென்றபோது தனக்கு தேவையான சாப்பாட... மேலும் பார்க்க

சுகேஷின் ரூ.200 கோடி மோசடி வழக்கு; அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விருப்பம்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் சிங் சிறையில் இருந்தபோது அவரை வெளியில் கொண்டு வருவதாக தொழிலதிபர் மனைவியிடம் கூறி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திர சேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிற... மேலும் பார்க்க

'சிராக் பஸ்வானுடன் காதல்?' - கங்கனா ரனாவத்தின் விளக்கம் என்ன?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்றம் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நாட்களில் தனக்கு அரசியல் பிடிக்கவில்லை என்று பேட்டியளிக்க ஆரம்பித்தார். இப்போது நாடா... மேலும் பார்க்க

"அப்போது என் தந்தை மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தார்; அவரின் மறைவுதான் எங்களை சேர்த்தது" - பாபி தியோல்

மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான பாபி தியோல், சமீபத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தந்தை தர்மேந்திராவின் மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறா... மேலும் பார்க்க

"தவறுகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை 'ராமாயணம்' கற்றுக்கொடுக்கிறது!" - 'ராமாயணா' படம் பற்றி யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. Ramayana Movieஇந்நிலையில், லாஸ் வேகா... மேலும் பார்க்க