செய்திகள் :

"சினிமா வேண்டாம் என்று ரூ.4500 சம்பளத்தில் வேலை செய்கிறார்" - மகன் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார்

post image

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் நடிகை டிவிங்கிள் கண்ணா தம்பதியின் மகன் ஆரவ் தனது 15 வயதில் லண்டன் சென்று பேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டு வந்தார்.

லண்டனில் படிக்கச் சென்றபோது தனக்கு தேவையான சாப்பாட்டைத் தானே சமையல் செய்து சாப்பிட்டதாக அக்‌ஷய் குமார் இதற்கு முன்பு பேட்டிகளில் குறிப்பிட்டு இருந்தார். எப்போது பொதுநிகழ்ச்சியில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஆரவ், சினிமா நிகழ்ச்சி அல்லது தனது தந்தையொடு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது.

பேஷன் டிசைனிங் முடித்துள்ள ஆரவ் தற்போது கிராமங்களில் உள்ள ஆடைகள், பிரிண்டிங் குறித்து தெரிந்து கொள்ள கிராமங்களுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

இது குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் அளித்த பேட்டியில், ''எனது மகன் ஆரவ்விற்கு சினிமாவின் ஆர்வம் கிடையாது. சினிமாவிற்கு வரும் திட்டமும் இல்லை. சொந்தமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடியவர். பேஷனில் ஆர்வம் காட்டுகிறார்.

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

ஆரவ் வேலை செய்து கொண்டே கற்றுக்கொண்டிருக்கிறார். இப்போது ரூ.4500 சம்பளத்தில் வேலை செய்கிறார். தனது பேஷன் கலையை முழுமையாகத் தெரிந்து கொள்ள அதிக அளவில் பயணம் செய்கிறார்.

அதோடு கிராமங்களில் இருக்கும் பேஷன் மற்றும் பிரிண்டிங்களைத் தெரிந்து கொள்ள கிராமங்களுக்குச் செல்கிறார். எனக்கும் எனது மகனுக்கு எப்போதும் கருத்து வேறுபாடு வந்ததில்லை.

எனக்கு ஆலோசனைகள் வழங்குவதில் நம்பிக்கை இல்லை. அதனால் நான் யாருக்கும் அறிவுரைகள் கொடுப்பதில்லை. குறிப்பாக எனது மகனுக்குக் கொடுப்பதில்லை. யாரையும் மனம் வருந்தும் படி செய்யக்கூடாது என்று மட்டும் சொல்வேன். மற்றதை அவனே பார்த்துக்கொள்வான்'' என்று தெரிவித்தார்.

அக்‌ஷய் குமாருக்கு இதற்கு முன்பு கனடா குடியுரிமை இருந்தது. அது குறித்து அடிக்கடி விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தனது கனடா குடியுரிமையை ரத்து செய்துவிட்டு இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.

சுகேஷின் ரூ.200 கோடி மோசடி வழக்கு; அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விருப்பம்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் சிங் சிறையில் இருந்தபோது அவரை வெளியில் கொண்டு வருவதாக தொழிலதிபர் மனைவியிடம் கூறி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திர சேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிற... மேலும் பார்க்க

'சிராக் பஸ்வானுடன் காதல்?' - கங்கனா ரனாவத்தின் விளக்கம் என்ன?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்றம் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நாட்களில் தனக்கு அரசியல் பிடிக்கவில்லை என்று பேட்டியளிக்க ஆரம்பித்தார். இப்போது நாடா... மேலும் பார்க்க

"அப்போது என் தந்தை மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தார்; அவரின் மறைவுதான் எங்களை சேர்த்தது" - பாபி தியோல்

மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான பாபி தியோல், சமீபத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தந்தை தர்மேந்திராவின் மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறா... மேலும் பார்க்க

"தவறுகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை 'ராமாயணம்' கற்றுக்கொடுக்கிறது!" - 'ராமாயணா' படம் பற்றி யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. Ramayana Movieஇந்நிலையில், லாஸ் வேகா... மேலும் பார்க்க

"தாவூத் இப்ராகிமால்தான் நான் பிழைப்பு நடத்துகிறேன்" - இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது என்ன?

பிரபல பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, மாபியாவை மையப்படுத்தி பல படங்களை இயக்கி இருக்கிறார். ராம்கோபால் வர்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடியவர். தற்போது அவர் பேசி இருக்கும் கருத்துக்கள... மேலும் பார்க்க

Bhoot Bangla - அக்‌ஷய்குமாரின் கிழிந்த ஆடை; டிரெய்லர் விழா ட்ரெண்ட் ஆனது எப்படி?

மும்பையில் நடைபெற்ற `Bhoot Bangla' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னணி நட்சத்திரங்களான அக்‌ஷய்குமார், தபு, வாமிகா கபி, ராஜ்பால் யாதவ் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆ... மேலும் பார்க்க