செய்திகள் :

"தவறுகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை 'ராமாயணம்' கற்றுக்கொடுக்கிறது!" - 'ராமாயணா' படம் பற்றி யஷ்

post image

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

Ramayana Movie
Ramayana Movie

இந்நிலையில், லாஸ் வேகாஸில் நடைபெறும் 'சினிமாகான் 2026' (CinemaCon) நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் யஷ், அவர் நடிக்கும் ராவணன் கதாபாத்திரத்தின் ஆடை மற்றும் அவருடைய காட்சிகள் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அங்கு அவர்,"'ராமாயணா' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், முதல் பாகத்தில் ரன்பீர் கபூரும் நானும் இணைந்து நடிக்கும் காட்சிகள் எதுவுமே கிடையாது.

ராவணனாக எனக்கு ஒரு தனி ராஜ்ஜியமும், ராமராக ரன்பீருக்கு ஒரு தனி ராஜ்ஜியமும் காட்டப்படுகிறது. இரண்டாம் பாகத்தில்தான் எங்களது நேருக்கு நேர் மோதல்கள் தொடங்கும். இயக்குநர்களின் பார்வையை முழுமையாக நம்பி நான் பணியாற்றி வருகிறேன்.

ஒரு நடிகராக எனது பார்வையை மட்டும் திணிக்காமல், இயக்குநரின் கனவுக்கு உயிர் கொடுக்க முயன்றுள்ளேன். அதேசமயம், ராவணன் கதாபாத்திரத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் கவனம் செலுத்தி, எனது சொந்தப் பங்களிப்பையும் கொடுத்திருக்கிறேன்.

நடிகர் யாஷ்
நடிகர் யஷ்

ராமாயணம் என்பது வெறும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையிலான போர் மட்டுமல்ல. ஒருவன் பல வழிகளில் சிறந்தவனாக இருந்தாலும், அவன் செய்யும் தவறுகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதையும் அது கற்றுக்கொடுக்கிறது.

நாம் அனைவரும் சிறுவயது முதலே இந்தக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள். இது நமது கலாசார நம்பிக்கையோடு கலந்த ஒன்று." என்றவர், "ராவணன் கதாபாத்திரத்தின் ஆடை அலங்காரம் மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தங்கம் மற்றும் கருப்பு நிறத்திலான கவசங்கள், கிரீடம் என ஒரு பேரரசுக்கான கம்பீரத்துடன் அந்த லுக் இருக்கும். ரன்பீர் கபூரை நான் சில முறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளேன். அவர் ஓர் அற்புதமான நடிகர். எங்களது இருவருக்குமான புரிதல் மற்றும் மரியாதை மிகவும் சிறப்பாக உள்ளது." எனக் கூறியிருக்கிறார்.

'சிராக் பஸ்வானுடன் காதல்?' - கங்கனா ரனாவத்தின் விளக்கம் என்ன?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்றம் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நாட்களில் தனக்கு அரசியல் பிடிக்கவில்லை என்று பேட்டியளிக்க ஆரம்பித்தார். இப்போது நாடா... மேலும் பார்க்க

"அப்போது என் தந்தை மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தார்; அவரின் மறைவுதான் எங்களை சேர்த்தது" - பாபி தியோல்

மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான பாபி தியோல், சமீபத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தந்தை தர்மேந்திராவின் மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறா... மேலும் பார்க்க

"தாவூத் இப்ராகிமால்தான் நான் பிழைப்பு நடத்துகிறேன்" - இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது என்ன?

பிரபல பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, மாபியாவை மையப்படுத்தி பல படங்களை இயக்கி இருக்கிறார். ராம்கோபால் வர்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடியவர். தற்போது அவர் பேசி இருக்கும் கருத்துக்கள... மேலும் பார்க்க

Bhoot Bangla - அக்‌ஷய்குமாரின் கிழிந்த ஆடை; டிரெய்லர் விழா ட்ரெண்ட் ஆனது எப்படி?

மும்பையில் நடைபெற்ற `Bhoot Bangla' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னணி நட்சத்திரங்களான அக்‌ஷய்குமார், தபு, வாமிகா கபி, ராஜ்பால் யாதவ் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆ... மேலும் பார்க்க

``ஒரு நிமிடம் கூட கண் சிமிட்டவில்லை" - ரன்வீர் சிங் படத்தை பாராட்டி விராட் கோலி

துரந்தர் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த மாதம் அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.ஆதித்ய தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்வீர்... மேலும் பார்க்க

`எங்கள் வீட்டில் அப்படி இல்லை... அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்' - மனம் திறந்த அபிஷேக் பச்சன்

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து அடிக்கடி வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற வதந்தி அதிக அளவில் பரவியது. ஆன... மேலும் பார்க்க