செய்திகள் :

"தாவூத் இப்ராகிமால்தான் நான் பிழைப்பு நடத்துகிறேன்" - இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது என்ன?

post image

பிரபல பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, மாபியாவை மையப்படுத்தி பல படங்களை இயக்கி இருக்கிறார். ராம்கோபால் வர்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடியவர். தற்போது அவர் பேசி இருக்கும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ராம் கோபால் வர்மா அளித்துள்ள பேட்டியில் தாவூத் இப்ராகிமைப் பாராட்டி இருக்கிறார். அவர் தனது பேட்டியில், ''தாவூத் இப்ராகிமால்தான் எனது பிழைப்பு நடக்கிறது. எனது வெற்றிக்கு தாவூத் இப்ராகிம்தான் காரணம். அவர் இல்லையென்றால் என்னால் சத்யா மற்றும் கம்பெனி போன்ற வெற்றிப்படங்களை எடுத்திருக்க முடியாது.

இந்தத் திரைப்படங்கள் என்னை பாலிவுட் துறையில் தனியாக அடையாளப்படுத்தி காட்டியது. அதோடு இந்தப் படங்கள்தான் எனக்கு இப்போதும் வருமானம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. தாவூத் இப்ராஹிம் கதைக்களங்களால்தான் தனது வாழ்க்கையும் பொருளாதார நிலையும் உயர்ந்தது.

இயக்குநர் ராம் கோபால் வர்மா
இயக்குநர் ராம் கோபால் வர்மா

எனவே எனது Guns & Thighs சுயசரிதையை முதலில் அந்தத் தாதாவிற்குத்தான் அர்ப்பணித்தேன். ஆனால் வெளியீட்டாளர்கள் அந்தப் பெயரை நீக்கிவிட்டனர்.

1990களில் மற்ற இயக்குநர்கள் நிழல் உலக தாதாக்களிடம் இருந்து மிரட்டல்கள் வந்தபோது, எனக்கு ஒரு மிரட்டல் அழைப்பு கூட வந்ததில்லை. தாதாக்கள் எனது படங்களை நேசித்தனர். தாதாக்களின் வாழ்க்கையைத் திரையில் மனிதாபிமானத்துடன் காட்டியதால் அவர்கள் தன்னை ஒரு ஆத்ம நண்பராகப் பார்த்தனர்'' என்று அவர் குறிப்பிட்டார்.

தாவூத் இப்ராகிமை ராம் கோபால் வர்மா பாராட்டி பேசி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான செய்தி சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியானவுடன் நெட்டிசன்கள் கடுமையாக தங்களது கருத்துக்களைப் பதிவிட்டனர்.

Bhoot Bangla - அக்‌ஷய்குமாரின் கிழிந்த ஆடை; டிரெய்லர் விழா ட்ரெண்ட் ஆனது எப்படி?

மும்பையில் நடைபெற்ற `Bhoot Bangla' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னணி நட்சத்திரங்களான அக்‌ஷய்குமார், தபு, வாமிகா கபி, ராஜ்பால் யாதவ் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆ... மேலும் பார்க்க

``ஒரு நிமிடம் கூட கண் சிமிட்டவில்லை" - ரன்வீர் சிங் படத்தை பாராட்டி விராட் கோலி

துரந்தர் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த மாதம் அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.ஆதித்ய தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்வீர்... மேலும் பார்க்க

`எங்கள் வீட்டில் அப்படி இல்லை... அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்' - மனம் திறந்த அபிஷேக் பச்சன்

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து அடிக்கடி வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற வதந்தி அதிக அளவில் பரவியது. ஆன... மேலும் பார்க்க

"நான் 'ராமாயணா' படத்தில் முதலில் நடிக்க மாட்டேன் என்றுதான் சொன்னேன், ஏனென்றால்..!"- ரன்பீர் கபூர்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். படத்தின... மேலும் பார்க்க

சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் 'வாரிசு' பட இயக்குநர் - மீண்டும் பாலிவுட்டில் நயன்தாரா!

சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு 'சிக்கந்தர்' திரைப்படம் வெளிவந்திருந்தது. அத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்து வரும் 'மாற்றுபூமி' படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் இம்மாத ரிலீஸா... மேலும் பார்க்க

SVC63: 'வாரிசு' பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான் - வெளியான அப்டேட்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டது தொடர்பாக மாத்ருபூமி என்ற பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் ஆரம்பத்தில், `பேட்ட... மேலும் பார்க்க