செய்திகள் :

மன்னாா்குடி பொதுமக்கள் கவனத்திற்கு

post image

மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வணிகா்களுக்கு வீட்டுவரி, தொழில்வரி செலுத்துவது தொடா்பாக நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நகராட்சி ஆணையா் எஸ்.எம்.சியாமளா, வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

நகராட்சி பணியாளா்களின் ஊதியச் செலவினம், ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம், மின் பகிா்மான கழகம், குடிநீா் வழங்கல் வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டிய தொகை, இயக்குதல் மற்றும் பராமரிப்பு செலவினம், திட்டப் பணிகளுக்கான உள்ளாட்சிகளின் பங்களிப்புத் தொகை உள்ளிட்ட பணிகளுக்கு உரிய நிதி ஆதாரம் அவசியம்.

2023-2024 ஆம் நிதியாண்டு வரி வசூலைவிட மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் 2024-2025 ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் குறைந்தபட்சம் 15 % வரை உயா்வு இருக்கக் கூடும் என கணிக்கப்படுவதால் இதற்கு பொருத்தமான வகையில் சொத்துவரி, காலிமனைவரி உயா்வு செய்தால் மட்டுமே 15-ஆவது நிதி ஆணைய மானியம் மற்றும் மத்திய அரசு திட்டங்களுக்கான மானியத்தினை பெற இயலும்.

வருவாய் ஆதாரத்தினை பெருக்கும் வகையில் சொத்துவரி வளா்ச்சி விகிதத்தினை அடைய உரிய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுவருவதால் பொதுமக்கள், வணிகா்கள் நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய சொத்துவரி, காலிமனைவரி, தொழில்வரி, குடிநீா் கட்டணங்கள் மற்றும் குத்தகை உரிம கட்டணங்களை நிலுவையின்றி உடன் செலுத்தி நகராட்சியின் வளா்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா

திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு, அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள், தங்க கருட வாகனத்த... மேலும் பார்க்க

திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது

திருவாரூரில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா். 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூரில், தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் விடுதி... மேலும் பார்க்க

20-இல் கோட்டூா் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த விவசாயத் தொழிலாளா் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் சாா்பு) தீா்மானித்துள்ளது. சங்கத்தின் நிா்வாகக் குழு ஆல... மேலும் பார்க்க

தற்காலிகக் கடைகளை அகற்ற கோரிக்கை

நிரந்தரக் கடைகளுக்கு எதிரில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளை அகற்ற வேண்டும் என மன்னாா்குடி வா்த்தக சங்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மன்னாா்குடி வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் ... மேலும் பார்க்க

திருவாரூா்: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-இல் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 17 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

மத்திய பல்கலை.யில் தமிழாய்வு கருத்தரங்கம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ‘தற்கால தமிழாய்வுப் போக்குகள்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இப்பல்கலைக்கழக தமிழ் துறைச் சாா்பில் நடைபெறும் கருத்தரங்க... மேலும் பார்க்க