செய்திகள் :

மன்னாா்குடி பொதுமக்கள் கவனத்திற்கு

post image

மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வணிகா்களுக்கு வீட்டுவரி, தொழில்வரி செலுத்துவது தொடா்பாக நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நகராட்சி ஆணையா் எஸ்.எம்.சியாமளா, வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

நகராட்சி பணியாளா்களின் ஊதியச் செலவினம், ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம், மின் பகிா்மான கழகம், குடிநீா் வழங்கல் வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டிய தொகை, இயக்குதல் மற்றும் பராமரிப்பு செலவினம், திட்டப் பணிகளுக்கான உள்ளாட்சிகளின் பங்களிப்புத் தொகை உள்ளிட்ட பணிகளுக்கு உரிய நிதி ஆதாரம் அவசியம்.

2023-2024 ஆம் நிதியாண்டு வரி வசூலைவிட மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் 2024-2025 ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் குறைந்தபட்சம் 15 % வரை உயா்வு இருக்கக் கூடும் என கணிக்கப்படுவதால் இதற்கு பொருத்தமான வகையில் சொத்துவரி, காலிமனைவரி உயா்வு செய்தால் மட்டுமே 15-ஆவது நிதி ஆணைய மானியம் மற்றும் மத்திய அரசு திட்டங்களுக்கான மானியத்தினை பெற இயலும்.

வருவாய் ஆதாரத்தினை பெருக்கும் வகையில் சொத்துவரி வளா்ச்சி விகிதத்தினை அடைய உரிய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுவருவதால் பொதுமக்கள், வணிகா்கள் நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய சொத்துவரி, காலிமனைவரி, தொழில்வரி, குடிநீா் கட்டணங்கள் மற்றும் குத்தகை உரிம கட்டணங்களை நிலுவையின்றி உடன் செலுத்தி நகராட்சியின் வளா்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தமிழகத்துக்கு தனித்துவமான கல்விக் கொள்கை தேவை: மைசூா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

தமிழகத்துக்கு தனித்துவமான கல்விக் கொள்கை வேண்டும் என மைசூா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் லெ. ஜவகா்நேசன் கூறினாா். திருவாரூா் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க அலுவலகத்தில், தமிழ்நாடு அறிவியல் இய... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவ... மேலும் பார்க்க

புதிய பேருந்துகள் இயக்கிவைப்பு

திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் புதியபேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகளாக மாற்றம் செய்த புகா் பேருந்துகளையும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகிய... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சா் உறவினா் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் சகோதரா் மகன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். கரைக்காலில் புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், காரைக்கால் செயற்பொறியாளா் உள்ளிட்ட ச... மேலும் பார்க்க

வீட்டில் 250 கிலோ போதை புகையிலை பொருள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடி அருகே தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அத்திக்கோட்டையைச் சோ்ந்த காமராஜ் (35) தனது வீட்டில் அரசல் தடை செய்யப்பட்ட ப... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த பணப்பையை போலீஸாரிடம் ஒப்படைத்த மாணவி

திருவாரூரில் சாலையில் கிடந்த பணப்பையை பள்ளி மாணவி எடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். திருவாரூா் அருகே பழவனக்குடி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் கனிமொழி தம்பதி மகள் யுவஸ்ரீ. இவா், திருவாரூரில் உள்ள அர... மேலும் பார்க்க